/* */

அரூரில் 3 நகைக்கடைகளில் கொள்ளை முயற்சி: பூட்டை உடைக்கும் சிசிடிவி காட்சி

அரூரில் 3 நகைக்கடைகளில் பூட்டை உடைத்து முகமூடி திருடர்கள் கொள்ளையடிக்க முயற்சித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

HIGHLIGHTS

அரூரில் 3 நகைக்கடைகளில் கொள்ளை முயற்சி: பூட்டை உடைக்கும் சிசிடிவி காட்சி
X

நகைக்கடையின் பூட்டை உடைக்கும் மர்ம நபரின் சிசிடிவி காட்சி.

தருமபுரி மாவட்டம், அரூர் பேருந்து நிலையம் அருகே உள்ள கடைவீதி பஜாரில் நகைக்கடை, ஜவுளிக்கடை, தனியார் தங்க நகை கடன் வங்கிகள் என நூற்றுக்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன.

இந்த நிலையில் நள்ளிரவு சுமார் ஒரு மணியளவில் 3 நகைக் கடைகளின் பூட்டை உடைத்து கொள்ளையடிக்க முயற்சித்த மாறுவேடத்தில் வந்த முகமூடி கொள்ளையர்கள், ஞானவேல் என்பவருக்கு சொந்தமான ஒரு நகைக் கடையில் மட்டும் சட்டரின் பூட்டை உடைத்து அதில் இருந்த சுமார் ரூ. 2 இலட்சம் மதிப்பிலான இரண்டரை கிலோ வெள்ளி நகைகளை மட்டும் கொள்ளையடித்தனர்.

மேலும் லாக்கரை உடைக்க முயற்சித்த கொள்ளையர்கள் லாக்கரை உடைக்க முடியாததால் வெள்ளி நகைகளை மட்டும் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். மீதமுள்ள இரண்டு கடைகளில் இருந்த சுமார் ஒரு கோடி மதிப்பிலான தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் பறிபோகமல் காப்பாற்றப்பட்டன.

தகவலறிந்து வந்த காவல்துறையினர் சிசிடிவி கேமராவை சோதனை செய்தபோது இளைஞர் ஒருவர் முகத்தில் முககவசம் அணிந்து, தலையில் மங்கி குல்லா மற்றும் கைகளுக்கு கையுறை உள்ளிட்டவைகளை பயன்படுத்தி கொள்ளை அடிக்க முயற்சித்திருப்பது தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து சிசிடிவி கேமரா பதிவுகளை வைத்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த திருட்டு சம்பவத்தால் கடைவீதி பஜாரில் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

Updated On: 3 April 2022 6:45 AM GMT

Related News

Latest News

  1. தொழில்நுட்பம்
    எலெக்ட்ரிக் பறக்கும் டாக்சி, e200..! ஐஐடி மெட்ராஸ் சாதனை..!
  2. லைஃப்ஸ்டைல்
    கோடை வெயிலிருந்து எலக்ட்ரானிக் சாதனங்களை பாதுகாப்பது எப்படி?
  3. வணிகம்
    விரைவில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் வழக்கமான விமான சேவையை தொடரும்:...
  4. லைஃப்ஸ்டைல்
    கல்லூரிகளில் மதிப்பெண்களை வைத்து பாடப்பிரிவை தேர்ந்தெடுப்பது எப்படி?
  5. இந்தியா
    28,200 மொபைல் இணைப்புகளை துண்டிக்க தொலைத்தொடர்பு துறை உத்தரவு
  6. மயிலாடுதுறை
    மயிலாடுதுறையில் பள்ளி வாகனங்கள் ஆய்வு..!
  7. வானிலை
    தமிழகத்தில் 6 நாட்களுக்கு கனமழை: வானிலை ஆய்வு மையம்
  8. திருவள்ளூர்
    மின்சாரம்,குடிநீர் தட்டுப்பாடு : பொதுமக்கள் சாலை மறியல்..!
  9. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியம் தரும் முருங்கைக் கீரை சூப் செய்வது எப்படி?
  10. உலகம்
    இன்னலுறும் நோயாளிகளுக்கு உதவும் செவிலியரை போற்றுவோம்..! நாளை செவிலியர்...