விளையாட்டு விடுதிகளில் மாணவ, மாணவிகள் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வரவேற்பு

விளையாட்டு விடுதிகளில் மாணவ, மாணவிகள் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வரவேற்பு

பைல் படம்.

தர்மபுரி மாவட்டத்தில் விளையாட்டு விடுதிகளில் மாணவ, மாணவிகள் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகினறன.

தர்மபுரி மாவட்டத்தில் விளையாட்டு விடுதிகளில் மாணவ, மாணவிகள் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகினறன.

இதுகுறித்து தர்மபுரி மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு விளையாட்டு துறையில் சாதனைகள் புரிவதற்கு ஏற்ப விளையாட்டு பயிற்சி தங்குமிட வசதி மற்றும் சத்தான உணவுடன் கூடிய விளையாட்டு விடுதிகள் மற்றும் விளையாட்டு பள்ளிகள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன.

மாணவர்களுக்கான விளையாட்டு விடுதிகள் மதுரை, திருச்சி, திருநெல்வேலி, கிருஷ்ணகிரி, கோவை, கடலூர், அரியலூர், தூத்துக்குடி, சிவகங்கை , தேனி, ராமநாதபுரம், உதகமண்டலம், விழுப்புரம், சென்னை, நெய்வேலி, நாமக்கல் ஆகிய இடங்களில் செயல்பட்டு வருகின்றன.

அதேபோல், மாணவியர்களுக்கான விளையாட்டு விடுதிகள் ஈரோடு, திருவண்ணாமலை, நாமக்கல், திண்டுக்கல், நாகர்கோயில், பெரம்பலூர், தேனி, புதுக்கோட்டை தருமபுரி, சென்னை ஆகிய இடங்களிலும் செயல்பட்டு வருகின்றன.

இந்த விடுதிகளில் உள்ள விளையாட்டுக்களில் பயிற்சி பெற்று சிறந்த வீரராக விளங்குவதற்கு 7-ஆம் வகுப்பு, 8-ஆம் வகுப்பு 9-ஆம் வகுப்பு, மற்றும் 11ஆம் வகுப்பு சேர்கைக்கான மாவட்ட அளவிலான தேர்வு போட்டிகள் மாவட்ட விளையாட்டரங்கம், தருமபுரியில் வரும் 23ம் தேதி காலை 8.00 மணியளவில் நடைபெறவுள்ளது.

தடகளம், இறகுபந்து, கூடைபந்து, குத்துசண்டை கிரிக்கெட், கால்பந்து, வாள்சண்டை ஜிம்னாஸ்டிக்ஸ், கைப்பந்து, ஹாக்கி, நீச்சல், டேக்வாண்டோ , வாலிபால், பளுதூக்குதல், கபாடி, மேசைபந்து, டென்னிஸ், ஜூடோ, ஸ்குவாஷ், வில்வித்தை, ஆகிய விளையாட்டுகளில் மாணவர்களுக்கும், தடகளம், இறகுபந்து, கூடைபந்து, குத்துசண்டை , கால்பந்து, வாள் சண்டை கைப்பந்து, ஹாக்கி, நீச்சல், டேக்வாண்டோ , வாலிபால், பளுதூக்குதல், கபாடி, டென்னிஸ், ஜூடோ, ஸ்குவாஷ் ஆகிய விளையாட்டுக்களில் மாணவிகளுக்கும் தேர்வு போட்டிகள் நடைபெறவுள்ளது.

மாவட்ட அளவிலான விளையாட்டு விடுதி தேர்வு போட்டிகளில் கலந்து கொள்ள https://www.sdat.tn.gov.in/ என்ற இணைய தள முகவரியில் மட்டுமே விண்ணப்பிக்க இயலும். இணையதளத்தில் விண்ணப்பிக்க கடைசி நாள் 22.03.2022 ஆகும்.

மாவட்ட அளவிலான தேர்வு போட்டிகளில் தேர்ச்சி பெறும் வீரர் வீராங்கனைகள் மாநில அளவிலான தேர்வு போட்டிகளில் கலந்துகொள்ள அனுப்பி வைக்கப்படுவர். மாநில அளவிலான போட்டிகளில் சிறப்பாக செயல்படும் வீரர்/வீராங்கனைகள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தால் நடத்தப்படும் விளையாட்டு விடுதிகளில் சேர்த்துக் கொள்ளப்படுவர்.

எனவே தருமபுரி மாவட்டத்திலுள்ள பள்ளி மாணவ மாணவிகள் இவ்வாய்ப்பினை பயன்படுத்தி தேர்வு போட்டிகளில் கலந்து கொண்டு. விளையாட்டு விடுதிகளில் சேர்ந்து தங்கள் விளையாட்டு திறனை மேம்படுத்திட கேட்டு கொள்ளப்பட்டுள்ளது.

Tags

Next Story