/* */

வேப்பூர் அருகே ரேஷன் அரிசி கடத்தியவர்கள் கைது:23 டன் அரிசி பறிமுதல்

வேப்பூர் அருகே கடத்தி வரப்பட்ட 23 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்து, கடத்தியவர்கள் போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

வேப்பூர் அருகே ரேஷன் அரிசி கடத்தியவர்கள் கைது:23 டன் அரிசி பறிமுதல்
X

கைதானவர்கள். 

கடலூர் மாவட்டம், வேப்பூர் சுற்றுவட்டார பகுதியில் இருந்து தொடர்ச்சியாக ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக திட்டக்குடி தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதனையடுத்து, இன்று அதிகாலை சிறுபாக்கம் அடுத்த மாங்குளம் அருகே தனிப்படை உதவி ஆய்வாளர் ஜம்புலிங்கம் தலைமையிலான போலீசார், அவ்வழியே வந்த லாரியை மடக்கி சோதனை செய்தனர். அதில் ரேஷன் அரிசி இருப்பது தெரிய வந்தது.

லாரி ஓட்டுனரிடம் தனிப்படை போலீசார் விசாரணை செய்ததில், அவர்கள் வேப்பூர் பகுதியில் இருந்து, வேலூருக்கு ரேஷன் அரிசி கடத்தி செல்வது தெரியவந்தது. லாரி மற்றும் அதில் இருந்த 23 டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்த போலீசார் லாரி ஓட்டுனர் புருஷோத்தமன், கிளீனியர் பெருமாள் .ராமசந்திரன், கடத்தலில் ஈடுபட்ட மங்களூர் கிராமத்தை சேர்ந்த வேல்முருகன்.ராமலிங்கம் ஆகியோரை சிறுபாக்கம் போலீசார் கைது செய்தனர்.

Updated On: 27 Dec 2021 2:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  3. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  4. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  5. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  6. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  7. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  8. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  9. ஈரோடு
    ஈரோட்டில் இன்று (மே.5) 5வது நாளாக 110 டிகிரிக்கு மேல் வெயில் பதிவு
  10. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’