/* */

ஆன்லைன் விளையாட்டில் பணத்தை இழந்த விரக்தியில் இளைஞர் தூக்கிட்டு தற்கொலை

ஆன்லைனில் கிரிக்கெட் விளையாடி வந்த அவர், அதில் ஆயிரக்கணக்கில் பணத்தை இழந்ததாக கூறப்படுகிறது.

HIGHLIGHTS

ஆன்லைன் விளையாட்டில் பணத்தை இழந்த விரக்தியில் இளைஞர் தூக்கிட்டு தற்கொலை
X

தற்கொலை செய்து கொண்ட கார்த்திக்

கோவை செல்வபுரம், முனியப்பா தோட்டம் செட்டி வீதியை சேர்ந்தவர் கார்த்திக் (36), இவருக்கு திருமணமாகி திவ்யா என்ற மனைவியும் (28), 3 வயதில் ஒரு ஆண் குழந்தையும், 6 வயதில் ஒரு பெண் குழந்தையும் உள்ளனர். சந்தையில் காய்கறிகளை மொத்தமாக கொள்முதல் செய்து, உணவகங்களுக்கு விற்பனை செய்து வந்த கார்த்திக், ஆன்லைன் விளையாட்டுகளுக்கு அடிமையானவர் என்று கூறப்படுகிறது. காய்கறி விற்பனை செய்து கிடைக்கும் பணத்தை ஆன்லைனில் செலுத்தி கிரிக்கெட் விளையாடி வந்த அவர், அதில் ஆயிரக்கணக்கில் பணத்தை இழந்ததாக கூறப்படுகிறது.

ஆன்லைன் விளையாட்டால் ஏற்பட்ட நஷ்டத்தால் கடந்த சில தினங்களாக கார்த்திக், கடும் மன உளைச்சலில் இருந்ததாகவும், இதுகுறித்து தனது மனைவியிடம் சொல்லி கார்த்திக் வேதனைப் பட்டதாகவும் சொல்லப்படுகிறது. ஆன்லைன் விளையாட்டில் சம்பாதிக்க முடியாமல் பணத்தை இழந்த விரக்தியில் இருந்த அவர், நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத போது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அவரது மனைவி திவ்யா அளித்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த செல்வபுரம் போலீசார், கார்த்திக்கின் உடலை பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Updated On: 2 Aug 2021 8:30 AM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. லைஃப்ஸ்டைல்
    வேலைத்தள உத்வேகத்தை உயர்த்தும் 7 உத்திகள்
  3. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  4. சினிமா
    கையில் கட்டுடன் வந்த ஐஸ்வர்யா ராய்க்கு கேன்ஸ்-ல் அன்பான வரவேற்பு
  5. பூந்தமல்லி
    விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதித்த பேரூராட்சி தலைவர்...
  6. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  7. கலசப்பாக்கம்
    டெங்கு மலேரியாவை தடுக்க நிலவேம்பு குடிநீர் வழங்கல்
  8. ஆரணி
    குண்டும் குழியுமான சாலை: சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை
  9. போளூர்
    சேத்துப்பட்டில் குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் வீடு தோறும் ஆய்வு
  10. செய்யாறு
    செய்யாற்றில் பேருந்து நடத்துனர் மீது தாக்குதல்! காவல்துறை விசாரணை