/* */

கோவை குற்றாலத்தில் நாளை முதல் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி

தொடர் மழை காரணமாக அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.

HIGHLIGHTS

கோவை குற்றாலத்தில் நாளை முதல் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி
X

கோவை குற்றாலம்.

கொரோனா தொற்று காரணமாக கடந்த ஓராண்டிற்கும் மேலாக சுற்றுலா தளங்கள் மூடப்பட்டிருந்தது. கொரோனா பரவல் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதை தொடர்ந்து கடந்த அக்டோபார் மாதம் சுற்றுலா தளங்கள் திறக்கப்பட்டது. இதன் ஒரு பகுதியாக கோவையின் முக்கிய சுற்றுலா தளங்களில் ஒன்றான கோவை குற்றாலம் அருவியும் திறக்கப்பட்டது. இருப்பினும் தொடர் மழை காரணமாக அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், கடந்த அக்டோபர் 4ம் தேதி முதல் அருவியில் குளிக்க வனத்துறையினர் காலவரையற்ற தடை விதித்தனர்.

கோவையில் கடந்த சில நாட்களாக மழை முற்றிலும் நின்றுள்ளதால், அருவிக்கு வரும் நீரின் அளவு குறைந்துள்ளது. இதனால் நாளை முதல் அருவியில் குளிக்க அனுமதிக்கப்படுவதாக வனத்துறை தெரிவித்துள்ளது. மேற்கு தொடர்ச்சி மலைகளின் வெள்ளியங்கிரி மலைச்சாரலில் பெய்யும் மழை நீர் சிற்றோடைகளாக மாறி, கோவை குற்றாலம் அருவியாக விழுகிறது. அடர் வனப்பகுதியில், ரம்மியமான சுற்றுச்சூழலுடன் அமைந்துள்ள இந்த அருவியில் குளிக்க, கோவை மட்டுமல்லாமல் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்களும் வந்து செல்கின்றனர்.

Updated On: 13 Dec 2021 6:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஆழ்ந்த சுவாசம் என்பது... உங்களை நீங்களே உணரும் அற்புத சக்தி!
  2. ஆன்மீகம்
    வரும் 18ம் தேதி திருப்பதி ஏழுமலையான் தரிசனம்; அதிர்ஷ்ட வாய்ப்பை மிஸ்...
  3. லைஃப்ஸ்டைல்
    முகம் பளிச்சுன்னு அழகா இருக்கணுமா? தயிரை முகத்துக்கு பயன்படுத்துங்க!
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியம் வேணுமா? இஞ்சி பூண்டு விழுதுடன் தேன் கலந்து சாப்பிடுங்க...!
  5. லைஃப்ஸ்டைல்
    அறுசுவையான மாப்பிள்ளை சம்பா சாம்பார் சாதம் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    சமையலை ருசியாக மாற்ற சில முக்கிய விஷயங்களை தெரிஞ்சுக்கலாமா?
  7. உலகம்
    ஆப்கானில் ஏற்பட்டதிடீர் வெள்ளம்! இறந்தவர்களின் எண்ணிக்கை 300க்கும்...
  8. லைஃப்ஸ்டைல்
    அரிசியில் பூச்சிகள், வண்டுகள் வராமல் தடுப்பது எப்படி?
  9. வணிகம்
    பாம் ஆயிலில் இருந்து சூரியகாந்தி எண்ணெய்க்கு மாறும் லேஸ் சிப்ஸ்..!
  10. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் கர்ப்பிணி பெண்களுக்கான மனநல ஆலோசனை முகாம்