/* */

1200 லிட்டர் கள்ளச் சாராயம் பறிமுதல் - போலீசார் நடவடிக்கை

வாடகைக்கு வீடு எடுத்து, யூடூப் பாரத்து கள்ளச் சாராயம் காய்ச்சி... போலீசில் சிக்கினர்.

HIGHLIGHTS

1200 லிட்டர் கள்ளச் சாராயம் பறிமுதல் - போலீசார் நடவடிக்கை
X

பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள்

கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் அடுத்த ஆலாந்துறை பகுதியில் சம்பத்குமார் என்பவரின் வீட்டில் சாராய ஊரல் போட்டு இருப்பதாக பேரூர் சரக மதுவிலக்கு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற மதுவிலக்கு காவல் துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கிருந்த நபர்கள், காவல் துறையினரை பார்த்ததும் தலை தெறிக்க தப்பி ஓடி விட்டனர்.‌

இதையடுத்து சம்பத் குமார் வீட்டிற்குள் சென்று பார்த்த போது, 1200 லிட்டர் சாராயம் காயச்ச ஊரல் போடப்பட்டு இருப்பது தெரியவந்தது. மேலும் அங்கிருந்த 10 லிட்டர் கள்ளச் சாராயம் , ஒரு ஸ்கார்பியோ கார், கேஸ் அடுப்பு, இரண்டு சிலிண்டர் , கள்ளச்சாராயம் காய்ச்சுவதற்கு பயன்படுத்திய பொருட்களை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். இதையடுத்து கள்ளச் சாராய ஊரலை காவல் துறையினர் அழித்தனர். இதையடுத்து காவல் துறையினர் விசாரணை நடத்திய போது போளுவாம்பட்டியை சேர்ந்த சம்பத் குமார் வாடகைக்கு வீடு எடுத்து, யூடூப் பாரத்து கள்ளச் சாராயம் காய்ச்சி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து சம்பத்குமார் மீது காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 15 Jun 2021 7:00 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    சவுக்கு சங்கர் கைது : மக்கள் என்ன சொல்றாங்க தெரியுமா..?
  2. தமிழ்நாடு
    வறட்சியின் பாதிப்பு :உயிரிழக்கும் கால்நடைகள்..!
  3. லைஃப்ஸ்டைல்
    வாங்க டீ சாப்பிடலாம்..! அன்பின் உபசரிப்பு..!
  4. மயிலாடுதுறை
    என்ன படிக்கலாம்? எங்கு படிக்கலாம்? உயர்கல்வி வழிகாட்டும் நிகழ்ச்சி..!
  5. நாமக்கல்
    ப.வேலூரில் அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு: முன்னாள் அமைச்சர்...
  6. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால்...சிறுமுயலும் சிங்கமாகும்..!
  7. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  8. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  9. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  10. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்