பழங்குடி மக்களுடன் நடனமாடி வாக்கு சேகரித்த அமைச்சர் எஸ்.பி.வேலுமணி
By - V.Prasanth Reporter |30 March 2021 5:04 AM GMT
அட்டுக்கல் மலைவாழ் கிராமத்தில் எஸ்.பி. வேலுமணி பழங்குடியின பெண்களுடன் இசைக்கு ஏற்ப நடனமாடி வாக்குகளை சேகரித்தார்.
தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதியில் மூன்றாவது முறையாக உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி போட்டியிடுகிறார். திமுக சார்பில் கார்த்திகேயே சிவசேனாபதி போட்டியிடுகிறார். அதிமுக மற்றும் திமுக இடையே நேரடி போட்டி உருவாகி இருப்பதால், அமைச்சர் வேலுபணி தீவிரமாக வாக்குகளை சேகரித்து வருகிறார். இந்நிலையில் அட்டுக்கல் மலைவாழ் கிராமத்திற்கு சென்ற அமைச்சர் எஸ் பி வேலுமணி அங்கிருந்த, பழங்குடியின பெண்களுடன், அவர்களது இசைக்கு ஏற்ப தனது ஆதரவாளர்களுடன் சேர்ந்து நடனமாடி வாக்குகளை சேகரித்தார்.
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu