/* */

கோவை வனப்பகுதியில் குளத்தில் விளையாடிய மகிழ்ந்த யானைகள்!

கோவையில், தாணிகண்டி பழங்குடியின குடியிருப்பு வழியாக காப்புக் காட்டிற்கு அருகே உள்ள குளத்தில் இறங்கி, 2 யானைகள் குளித்து விளையாடி மகிழ்ந்தன.

HIGHLIGHTS

கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் அடுத்த செம்மேடு பகுதியில் உள்ள முட்டத்து வயல் என்ற குளம் உள்ளது. அந்த குளத்தில் அதிகாலை நேரத்தில் 2 ஆண் யானைகள் நீரில் இறங்கி விளையாடிக் கொண்டிருந்தன. இதனைப் பார்த்த அப்பகுதி மக்கள், வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

அந்த இரண்டு ஆண் யானைகளும் காட்டை விட்டு வெளியே வர முயற்சித்தபோது, வனக்காவலர்கள் அதனை தடுத்து மீண்டும் வனப்பகுதிக்குள் அனுப்பி இருந்தனர். அந்த யானைகள் மீண்டும் தாணிகண்டி என்ற பழங்குடியின குடியிருப்பு வழியாக காப்புக்காட்டில் இருந்து 2 கிலோ மீட்டர்கள் வெளியேறி குளம் அமைந்துள்ள பகுதிக்கு வந்ததாக, வனத்துறையினர் தெரிவித்தனர்.

மேலும் யானைகளை காட்டுக்குள் அனுப்பும் நடவடிக்கைகளுக்காக 3 குழுக்கள் அமைக்கப்பட்டு, கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், குளத்தில் சகதி ஏதும் இல்லாத நிலையில், யானைகளை பத்திரமாக காட்டுக்குள் அனுப்பப்படும் என்றும் வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இதனிடையே, குளத்தில் ஆனந்தக்குளியல் போட்டு விளையாடி மகிழ்ந்த யானைகள், பின்னர் அங்கிருந்து வெளியேறி மீண்டும் வனப்பகுதிக்குள் சென்றன.

Updated On: 16 Jun 2021 2:24 AM GMT

Related News

Latest News

  1. சோழவந்தான்
    மதுரை அருகே பாலமேட்டில் ஆட்டோ ஓட்டுநர் நல சங்கம் சார்பில் மே தின விழா
  2. நாமக்கல்
    நான் முதல்வன் திட்டத்தில் முதலிடம் பெற்று சாதனை படைத்தவருக்கு...
  3. ஈரோடு
    வீட்டு முன் மரம் நட்டினால் வரி சலுகை: அமைச்சர் முத்துசாமி தகவல்
  4. திருப்பரங்குன்றம்
    மதுரை யானைமலை ஒத்தக்கடை அருகே முதுமை தடுப்பு இலவச பொது மருத்துவ
  5. திருப்பூர் மாநகர்
    திருப்பூர் நிப்ட்-டீ கல்லூரி இலவச தொழிற்பயிற்சி
  6. நாமக்கல்
    தேர்தல் கமிஷன் விதிமுறைகளுக்கு உட்பட்டு தண்ணீர் பந்தல் திறக்க அனுமதி
  7. திருப்பரங்குன்றம்
    மதுரை அருகே திருப்பரங்குன்றத்தில் திமுக சார்பில் நீர்மோர் பந்தல்...
  8. காங்கேயம்
    விதிமுறைகளை மீறினால் தெருக்குழாய் அகற்றப்படும்; வெள்ளக்கோவில் நகராட்சி...
  9. திருவள்ளூர்
    வீட்டை விட்டு துரத்தியதாக முதியவர் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு
  10. சோழவந்தான்
    மதுரை அலங்காநல்லூர் அருகே ஜல்லிக்கட்டு காளைக்கு பிறந்த நாள் விழா