/* */

கோவை அருகே காட்டு யானை தாக்கி விவசாயி உயிரிழப்பு

கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் அருகே காட்டு யானை தாக்கி விவசாயி உயிரிழந்தார்.

HIGHLIGHTS

கோவை அருகே காட்டு யானை தாக்கி விவசாயி உயிரிழப்பு
X

பலியான சின்னசாமி.

கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் அடுத்து விராலியூர் கிராமத்தை சேர்ந்தவர் சின்னசாமி. விவசாயியான இவருக்கு தண்டுக்காரன் கோவில், மலை அடிவாரத்தில் சொந்தமாக தோட்டம் உள்ளது. அத்தோட்டத்திற்கு சின்னசாமி வழக்கமாக இரவு நேர காவலுக்கு செல்வது வழக்கம்.

நேற்று வழக்கம்போல் இரவு காவலுக்கு சென்றுள்ளார். இன்று அதிகாலை 1 மணி அளவில் தோட்டத்திற்குள் ஒற்றை யானை புகுந்ததை பார்த்துள்ளார். அந்த யானை வெங்காயம் சேமித்து வைக்கப்பட்டிருந்த பட்டறையை சேதப்படுத்துவதை கவனித்த சின்னசாமி, டார்ச்லைட் மூலம் ஒளி ஏற்படுத்தி, யானையை விரட்ட முயன்றுள்ளார்.

இதனால் கோபமடைந்த யானை, சின்னசாமியை நோக்கி ஓடி வந்தது. அங்கிருந்து வீட்டுக்குள் ஓட முயன்ற சின்னசாமியை, யானை தும்பிக்கையால் தூக்கி வீசி மிதித்துள்ளது. அவரின் அலறல் சத்தத்தை கேட்ட பக்கத்து தோட்டத்தில் இருந்தவர்கள், அங்கு வந்து சத்தம் எழுப்பி யானையை விரட்டினர். பின்னர், படுகாயமடைந்த சின்னசாமியை மீட்டு தொண்டாமுத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

ஆனால், அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனையடுத்து பிரேத பரிசோதனைக்காக சின்னசாமியின் உடல் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. தகவலறிந்த போளுவாம்பட்டி வனத்துறையினர் மற்றும் ஆலாந்துறை போலீசார், சம்பவ இடத்திற்கு வந்து யானை தாக்கியது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Updated On: 17 Sep 2021 4:30 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    😢ரொம்பவே எதிர்பார்த்து வந்தோம்! 😪இப்படி கவுத்து விட்டாங்களே! CSK...
  2. இந்தியா
    தெலங்கானா முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர ராவ் பிரசாரம் செய்ய தேர்தல்...
  3. வேலூர்
    வேலூரில் 110 டிகிரி பாரன்ஹீட்டைத் தாண்டிய வெயில்!
  4. வீடியோ
    அரசியல்வாதியான Aranthangi Nisha | பக்கத்தில் நிற்க வைத்து கலாய்த்த...
  5. கும்மிடிப்பூண்டி
    பெரியபாளையத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா!
  6. வீடியோ
    லாரன்ஸ் சேவை செய்ய காரணமென்ன ?| உண்மையை உடைத்த SJ Suryah |#sjsuryah...
  7. வீடியோ
    SJ Suryah போல பேசிய Lawrence Master | Raghava Lawrence | #maatram...
  8. தமிழ்நாடு
    தெரியாத அதிசயங்கள்! தெரிந்த கோயில்கள்!
  9. தமிழ்நாடு
    ஆங்கிலேயர்கள் கொள்ளையடித்தார்கள்! இயற்கை வளங்களை அழிக்கவில்லை!
  10. சினிமா
    கற்பனை என்றாலும்... கற்சிலை என்றாலும் கந்தனே உனை மறவேன்....!