/* */

தேர்தலில் தில்லுமுல்லு செய்து திமுக வெற்றி பெற முயற்சி - எஸ்.பி.வேலுமணி குற்றச்சாட்டு

கோவை 92 வது வார்டான சுகுணாபுரம் பகுதியில், அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, தனது வாக்கினை பதிவு செய்தார்.

HIGHLIGHTS

தேர்தலில் தில்லுமுல்லு செய்து திமுக வெற்றி பெற முயற்சி - எஸ்.பி.வேலுமணி குற்றச்சாட்டு
X

கோவை 92 வது வார்டான சுகுணாபுரம் பகுதியில், அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, தனது வாக்கினை பதிவு செய்தார்.

கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட 92 வது வார்டான சுகுணாபுரம் பகுதியில், அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, தனது வாக்கினை பதிவு செய்தார். இதையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், கோவை மாவட்டத்தை பொறுத்த வரை ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி ஆகியோர் மிகப்பெரிய வளர்ச்சியை தந்துள்ளனர். 50 ஆண்டுகளில் இல்லாத வளர்ச்சியை தந்துள்ளனர். அதனால் கோவை மாவட்ட மக்கள் முழுமையாக அதிமுகவிற்கு வாக்களிப்பார்கள்.

கடந்த சட்டமன்ற தேர்தலில் கோவை மாவட்டத்தில் 11 தொகுதிகளிலும் அதிமுகவிற்கு வெற்றியை தந்தார்கள். அதனால் தான் எப்படியாவது, எதாவது செய்து வெற்றி பெற திமுக முயற்சிக்கிறது. திமுக தில்லுமுல்லு செய்து வெற்றி பெற முயற்சிக்கிறது. நேற்று கோவைக்கு கூடுதல் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டு இருந்தாலும், தோல்வி பயத்தால் வெளியூர்காரர்கள் வடவள்ளி, காளப்பட்டி உள்ளிட்ட சில இடங்களில் இன்னும் இருக்கின்றனர். அவர்களுக்கு காவல் துறையினர் உடந்தையாக உள்ளனர். இதனை தேர்தல் ஆணையம் கவனத்தில் கொண்டு விதிமுறைகளுக்கு உட்பட்டு முறையாக தேர்தல் நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கோவை மாநகராட்சி மேயர் பதவியை அதிமுக கைப்பற்றும். பல திட்டங்களை தந்து கோவை மாவட்டத்தை மாற்றி அமைத்துள்ளோம். அதேபோல நகராட்சி, பேரூராட்சி உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் அதிமுக வெற்றி பெறும். நேற்று முன் தினம் மாலை 6 மணிக்குள் வெளியூர்காரர்களை வெளியேற்றததால் தான், நேற்று போராட்டம் நடத்தி கைதானோம். வெளியூர்காரர்கள் இன்னும் கோவையில் உள்ளனர்.

தேர்தல் முடிந்த பின்னால் அதிமுக வெற்றி பெற்றாலும், திமுக வெற்றி பெற்றதாக அதிகாரிகள் உடந்தையுடன் அறிவிக்க திட்டமிட்டுள்ளனர். விதிமீறலில் ஈடுபடும் அதிகாரிகள் மீது தனிப்பட்ட முறையில் நடவடிக்கைக எடுக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தேர்தல் சரியாக நடத்த வேண்டும் என்பது தான் எங்களின் கோரிக்கை என அவர் தெரிவித்தார்.

Updated On: 19 Feb 2022 4:30 AM GMT

Related News

Latest News

  1. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் தேவையற்ற புதைவட கேபிள்களை அகற்ற மனு
  2. குமாரபாளையம்
    பள்ளிபாளையத்தில் கனமழை: பிரதான சாலைகளில் சாய்ந்த இரு மரங்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    இல்லற வாழ்வில் நல்லறம் கண்ட தம்பதிக்கு வாழ்த்துகள்..!
  4. மேட்டுப்பாளையம்
    கோவில்பாளையம் பகுதியில் 2 கிலோ கஞ்சா சாக்லேட் பறிமுதல்..!
  5. தொழில்நுட்பம்
    சந்திரனில் முதல் ரயில் பாதை அமைக்க நாசா திட்டம்
  6. லைஃப்ஸ்டைல்
    கரம் கொடுத்த நீ, பிரியாத வரம் ஒன்று தாராய்..!
  7. லைஃப்ஸ்டைல்
    காதல் வானில் பறக்கும் ஜோடிக் கிளிகளுக்கு வாழ்த்துகள்..!
  8. வீடியோ
    🤔Ilaiyaraaja அப்புடி என்ன பண்ணிட்டாரு?RV Udhayakumar OpenTalk...
  9. லைஃப்ஸ்டைல்
    இதயமே நீதானே என் அன்பே..! உன்னை சரணடைந்தேன்..!
  10. இந்தியா
    வாக்காளரை அறைந்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏ! திருப்பி அறைந்த...