1.8 கோடி மதிப்புள்ள "2 ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டுகள்" பறிமுதல்

1.8 கோடி மதிப்புள்ள 2 ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டுகள் பறிமுதல்
X
கோவையில் இருந்து கள்ள நோட்டுகள் புழக்கத்தில் விடப்படுவது தெரியவந்தது.

கேரள மாநிலத்தில் 2 ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டுகள் புழக்கத்தில் விடப்படுவதாக, கொச்சி நகர காவல் நிலைய காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் கேரள தனிப்படை காவல் துறையினர் நடத்திய விசாரணையில், கோவையில் இருந்து கள்ள நோட்டுகள் புழக்கத்தில் விடப்படுவது தெரியவந்தது. மேலும் கோவை கரும்புக்கடை அருகேயுள்ள வள்ளல் நகர் பகுதியில் உள்ள அஸ்ரப் (24) என்பவரை மடக்கிப்பிடித்து கைது செய்தனர்.

அஸ்ரப் அளித்த தகவலின் அடிப்படையில் உக்கடம் அல்-அமீன் காலனி பகுதியில் உள்ள செய்யது சுல்தான் (32) என்பவர் வீட்டில் கேரளா மற்றும் கோவை போலீசார் இணைந்து சோதனை நடத்தினர். இந்த சோதனையில் 1.8 கோடி ரூபாய் மதிப்புள்ள கள்ள ரூபாய் நோட்டுகள் கத்தை கத்தையாக பறிமுதல் செய்யப்பட்டது. இந்த நோட்டுகள் எங்கிருந்து வந்தது, எங்கெங்கு புழக்கத்தில் விடப்பட்டது என்பது உள்ளிட்டவை குறித்து தனிப்படை போலீசார் இரண்டு பேரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கைதான 2 பேரிடமும் விசாரணை நடத்த கேரளாவுக்கு கேரள காவல் துறையினர் அழைத்து சென்றனர். கோவையில் கத்தை கத்தையாக 1.8 கோடி ரூபாய் மதிப்புள்ள 2000 ரூபாய் நோட்டுகள் பிடிபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Tags

Next Story
ai in future agriculture