/* */

கொரோனா விதிமீறல்: ஸ்பாவிற்கு சீல் வைத்து கோவை மாநகராட்சி அதிரடி

கோவை பாரதி பார்க் பகுதியில், கொரோனா ஊரடங்கு விதிகளை மீறி செயல்பட்ட ஸ்பாவிற்கு, மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர்.

HIGHLIGHTS

கொரோனா விதிமீறல்: ஸ்பாவிற்கு சீல் வைத்து  கோவை மாநகராட்சி அதிரடி
X

கோவை பாரதி பார்க் பகுதியில், விதிமுறைகளை மீறிய ஸ்பாவிற்கு சீல் வைத்த மாநகராட்சி அதிகாரிகள்.

கோவை மாவட்டம் கொரொனா தொற்று பரவலில் தொடர்ந்து தமிழக அளவில் முதலிடத்தில் இருந்து வருகிறது. தொடர் நடவடிக்கைகள் காரணமாக, கடந்த சில தினங்களுக்கு முன்பு 4000 மாக இருந்த தொற்றாளர்களின் எண்ணிக்கை, தற்போது 1500 க்கு கீழ் வந்துள்ளது.

எனினும் தமிழக அளவில் ஒப்பிடும் போது கொரோனா பாதிப்புகள் அதிகம் என்பதால் , கோவை மாவட்டத்தில் கட்டுப்பாடுகள் தொடர்கின்றது.

இந்நிலையில் கோவை பாரதி பார்க் பகுதியில் செயல்பட்டு வரும் "கீரின் டே ஸ்பா " கொரொனா விதிமுறைகளை மீறி செயல்பட்டு வருவதாக மாநகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து அங்கு சென்ற மாநகராட்சி அதிகாரிகள் அழகு நிலையத்திற்கு சீல் வைத்தனர். அந்த அழகு நிலைய நிறுவனத்திற்கு 25 ஆயிரம் அபராதமும் மாநகராட்சி அதிகாரிகள் விதித்தனர். கொரொனா தடுப்பு விதிமுறைகளை மீறி செயல்பட்டால் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என, கோவை மாநகராட்சி அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

Updated On: 17 Jun 2021 2:04 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தோல்வி கண்டு துவளாதீர்..! வீழ்ச்சி எழுச்சிக்கான முயற்சி..!
  2. லைஃப்ஸ்டைல்
    உனை பிரியாத வரவேண்டும் என்னுயிரே..!
  3. வீடியோ
    சினிமா படத்தில்ல இருக்கிறது எல்லாம் நல்லவா இருக்கு? ...
  4. லைஃப்ஸ்டைல்
    குடும்ப உறவாகும் நட்பு..! இருபக்க மகிழ்ச்சி..!
  5. பொன்னேரி
    ஆற்றில் சட்டவிரோதமாக மணல் கொள்ளை
  6. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் 8 தேர்வு மையங்களில் நாளை நீட் தேர்வு
  7. ஈரோடு
    ஈரோடு சென்ட்ரல் ரோட்டரி சங்கம், ஈரோடு ஆத்மா மின்மயான அறக்கட்டளை...
  8. வீடியோ
    🔴LIVE : காங்கிரஸ் MLA ரூபி மனோகரன் செய்தியாளர் சந்திப்பு | Ruby...
  9. வீடியோ
    அதெல்லாம் அவுங்க விருப்பம்!மிஷ்கினுக்கு அறிவுரை சொன்ன முதியவர்! சொல்ல...
  10. வீடியோ
    🔴LIVE : முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பத்திரிகையாளர் சந்திப்பு |...