வேலை வாங்கி தருவதாக ஓட்டல் அறையில் இளம் பெண்ணை, ராணுவ வீரர் செய்த காரியம் திக், திக்

வேலை வாங்கி தருவதாக ஓட்டல் அறையில் இளம் பெண்ணை, ராணுவ வீரர் செய்த காரியம் திக், திக்
பைல் படம்,
இளம் பெண்ணை ஓட்டல் அறைக்கு வரவைத்து, ராணுவ வீரர் பாலியல் பலாத்காரம் செய்தார். இது குறித்து போலீசார் ராணுவ வீரரரை தேடி வருகின்றனர்.

கோவை சுந்தராபுரத்தை சேர்ந்தவர் 25 வயது இளம்பெண். இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். இவரது கணவர் ஒர்க் ஷாப்பில் பணிபுரிந்து வருகிறார்.

இந்நிலையில், அந்த பெண் வேலைக்கு முயற்சி செய்து கொண்டிருந்தார். தனக்கு தெரிந்த வர்களிடம் வேலை இருத்தால் சொல்லுங்கள் என தெரிவித்து வைத்திருத் தார்.

அப்போது அவருக்கு தூரத்து உறவினரான தேனி மாவட்டம் போடியை சேர்ந்த வாலி பர் ஒருவர் பழக்கமானார். அவர் இளம்பெண்ணுக்கு வேலை வாங்கி தருவதாக உறுதியளித்தார்.

இதனி டையே கடந்த மாதம் இளம் பெண்ணை செல்போனில் தொடர்பு கொண்ட அவர் உனக்கு நான் வேலை ஏற் பாடு செய்து விட்டேன், கோவை வருகிறேன், வேலை விஷயமாக உன் னிடம் ஒருவரை அறிமுகப்படுத்தி வைக்கிறேன். சுந்தராபுரத்தில் உள்ள ஒரு ஓட்டலில் நேரில் சந்தித்து மற்றவற்றை பேசிக்கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.

அந்த வாலிபரின் நயவஞ்சகம் புரியாமல் இளம்பெண்ணும் அப்பாவித்தனமாக தனது குழந்தைகளை உறவினர் வீட்டில் விட்டு விட்டு அவர் குறிப்பிட்ட ஒரு ஓட்டலுக்கு சென் றுள்ளார். அங்கு அந்த வாலிபர் மட்டும் இருந்துள்ளார். சிறிது நேரம் வேலை சம்பந்தமாக பேசியுள்ளனர். பின்னர் அந்த வாலிபரின் பேச்சு வேறு விதமாக திரும்பி பது.

இளம் பெண்ணை தொட்டு சில்மிஷம் செய் துள்ளார் இளம் பெண் அதற்கு மறுப்பு தெரி வித்துள்ளார். ஆனால் வலுக்கட்டாயமாக அவர் இளம் பெண்ணை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். மேலும் இது குறித்து வெளியே சொன்னால் கொன்று விடுவேன் எனவும் மிரட்டியுள்ளார். இதனால் அதிர்ச்சியில் வீடு திரும் பிய அந்த இளம் பெண்கோவை போத்தனூர் போலீசில் புகார் அளித் தார்.

பின்னர் இந்த வழக்கு கோவை அனைத்து மகளிர் (கிழக்கு) காவல் நிலையத்துக்கு மாற்றப்பட்டது. இன்ஸ்பெக்டர் அமுதா விசாரணை நடத் தினார். விசாரணையில், இளம்பெண்ணை மிரட்டி அவரை பாலியல் பலாத் காரம் செய்தது அவரது தூரத்து உறவினர் தேனி மாவட்டம் போடியை சேர்ந்த சரவணன் (38) என்பதும், இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் இருப்பதும் தெரியவந்தது.

இவர் ராணுவ வீரராக உள்ளார். விடுமுறையில் வந்த இவர் இந்த வீரசெயலில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இது தொடர்பாக அவர் மீது பலாத்காரம், கொலை மிரட்டல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ராணுவர் வீரர் ஒருவர் இளம் பெண்னை ஓட்ட லுக்கு வரவழைத்து பாலி பல்பவாத்காரம் செய்த சம்பவம் கோவையில் பெரும் பரப ரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story