/* */

சமூகப் பொறுப்புடன் தொண்டு செய்த ஸ்ரீகிருஷ்ணா ஆதித்யா கலை அறிவியல் கல்லூரி

சமூகப் பொறுப்புடன் தொண்டு செய்த ஸ்ரீகிருஷ்ணா ஆதித்யா கலை அறிவியல் கல்லூரி
X

தனித்திறன் போட்டியில் வெற்றிபெற்ற மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கும் ஸ்ரீ கிருஷ்ணா ஆதித்யா கலை அறிவியல் கல்லூரி பேராசிரியர்கள். 

மாணவர்களுக்கு சமூக பொறுப்பினையும், உதவும் மனப்பான்மையும் வளர்க்கவேண்டும் என்பதற்காக ஸ்ரீ கிருஷ்ணா ஆதித்யா கலை அறிவியல் கல்லூரி முதல்வர் முனைவர் பழனியம்மாள் ஆலோசனைப்படி, கல்லூரி பேராசிரியர்கள் தங்கள் மாணவ மாணவிகளை கோவை சௌரிபாலயத்தில் உள்ள "ஆல் தி சில்ரன் பார் கேர்ள்ஸ்" என்னும் குழந்தைகள் இல்லத்திற்கு சனிக்கிழமை (12.03.2022) அழைத்துச் சென்றனர்.

சமுதாய பொறுப்பின் ஒரு அங்கமாக அந்த இல்லத்தில் உள்ள குழந்தைகளின் அன்றாட தேவைகளுக்காக கல்லூரி உறுப்பினர்களின் நன்கொடையாக பலசரக்கு மற்றும் மளிகை பொருள்களை வழங்கினர். மேலும் குழந்தைகளின் கல்வி மேம்பாட்டிற்காக சில வகுப்புகளையும் அவர்களின் தனி திறனை ஊக்குவிக்கும் விதமாக பல்வேறு போட்டிகளையும் நடத்தி, அவர்களை ஊக்கப்படுத்தி இனிப்புகள், எழுதுபொருட்கள் உட்பட பரிசுகளையும் வழங்கினர்.

கல்லூரியின் சார்பாக தகவல் தொழில்நுட்பத்துறை தலைவர் முனைவர் ஸ்ரீஜித் விக்னேஷ்பாபு, நாட்டு நலப் பணித்திட்ட அலுவலர் மற்றும் துணை பேராசிரியர் கோபி ஆகியோர் கலந்து கொண்டு பலசரக்கு, மளிகை பொருட்களை ஆல் தி சில்ரன் பார் கேர்ள்ஸ் இல்லத்தின் மக்கள் தொடர்பு அதிகாரி மற்றும் சமூக சேவகரான ஈஸ்வரனிடம் வழங்கினர்.

ஸ்ரீ கிருஷ்ணா ஆதித்யா கலை அறிவியல் கல்லூரி நிர்வாகத்திற்கும், கல்லூரி முதல்வருக்கும், பேராசிரியர்களுக்கும், மாணவ மாணவிகளுக்கும் குழந்தைகள் இல்லத்தின் சார்பாக ஈஸ்வரன் நன்றியினை தெரிவித்தார்.

Updated On: 14 March 2022 1:29 PM GMT

Related News

Latest News

  1. உலகம்
    ஆறுமாத குழந்தை மீது பலமுறை துப்பாக்கிச்சூடு..! தந்தை கைது..!
  2. திருவள்ளூர்
    பழுதடைந்த குடிநீர் தொட்டியை அகற்ற கிராம மக்கள் கோரிக்கை!
  3. உலகம்
    கடந்த ஆண்டில் வெளுத்துவிட்ட உலகின் 60% க்கும் மேற்பட்ட பவளப்பாறைகள்
  4. அரசியல்
    சீனாவை எதிர்க்க இந்தியாவுக்கு தைரியம் இருக்கா? படீங்க உங்களுக்கே...
  5. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1,120 கன அடியாக அதிகரிப்பு
  6. மேட்டுப்பாளையம்
    கனமழை காரணமாக மண் சரிவு : மேட்டுப்பாளையம் - உதகை மலை ரயில் ரத்து..!
  7. திருப்பரங்குன்றம்
    கூடலகப் பெருமாள் கோயில், வைகாசிப் பெருந் திருவிழா!
  8. தொழில்நுட்பம்
    550 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள டிரிபிள்-ஸ்டார் சிஸ்டத்தை கைப்பற்றிய...
  9. உலகம்
    எகிப்தியர்கள் பிரமிடுகளை எவ்வாறு கட்டினார்கள் என்ற மர்மத்துக்கு...
  10. வீடியோ
    NO பருப்பு NO பாமாயில் எதனால் இந்த நிலைமை || #mkstalin #tngovt...