கனிமொழி எம்.பி.யை தடுத்த காவல்துறை, திமுக மறியல்

கனிமொழி எம்.பி.யை தடுத்த காவல்துறை, திமுக மறியல்
X

பொள்ளாச்சி பாலியல் வழக்கு ஆர்ப்பாட்டத்திற்கு சென்ற கனிமொழி எம்.பி.யை காவல் துறையினர் தடுத்து நிறுத்தியதால், திமுகவினர் போராட்டம் நடத்தினர்.

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் விரைந்து விசாரணை நடத்தி முக்கிய குற்றவாளிகளை கைது செய்யக்கோரி, பொள்ளாச்சியில் அனைத்துக் கட்சி ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க திமுக மகளிரணி செயலாளர் கனிமொழி எம்.பி. கோவையில் இருந்து காரில் பொள்ளாச்சிக்கு சென்றார். கோவை - பொள்ளாச்சி சாலையில் ஈச்சனாரி அருகேயுள்ள கற்பகம் பல்கலைகழகம் பகுதியில் கனிமொழி உள்ளிட்டோரின் கார்களை காவல் துறையினர் தடுத்து நிறுத்தினர்.இதையடுத்து திமுகவினர் காவல் துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு, சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தினர். 5 நிமிட போராட்டத்திற்கு பின்னர், காவல் துறையினர் தடுப்புகளை மீறி கனிமொழி உள்ளிட்டோர் பொள்ளாச்சி புறப்பட்டு சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது

Tags

Next Story
ai solutions for small business