/* */

புதிய வகை கொரோனா பரவல் எதிரொலி - இங்கிலாந்தில் இருந்து கோவை வந்த 4 பேர் தனிமைப்படுத்தல்

புதிய வகை கொரோனா பரவல் எதிரொலி - இங்கிலாந்தில் இருந்து கோவை வந்த 4 பேர் தனிமைப்படுத்தல்
X

இங்கிலாந்திலிருந்து கோயமுத்தூர் வந்த 4 பேரை சுகாதாரத்துறையினர் தனிமைப்படுத்தி கண்காணித்து வருகின்றனர்.

புதிய வகை கொரோனா வைரஸ் பரவல் எதிரொலியாக இங்கிலாந்தில் இருந்து வரும் பயணிகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் இங்கிலாந்தில் இருந்து கடந்த வாரம் சென்னை வழியாக விமானம் வழியாக 4 பேர் கோவைக்கு வந்தனர். கோவை மாநகர பகுதியை சேர்ந்த 3 பேர், பொள்ளாச்சியை சேர்ந்த ஒருவரை சுகாதாரத் துறையினர் தனிமைப்படுத்தி கண்காணித்து வருகின்றனர்.

அவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனையில் நெகடிவ் என வந்துள்ள நிலையில், 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தி கண்காணிக்க சுகாதாரத் துறையினர் திட்டமிட்டுள்ளனர். கோவை விமான நிலையத்தில் வெளிநாட்டில் இருந்து வரும் பயணிகளை சுகாதாரத் துறையினர் குழு அமைத்து கண்காணித்து வருகின்றனர். இதேபோல தமிழக - கேரள எல்லையான வாளையார் பகுதி வழியாக கோவை வரும் பயணிகளையும் சுகாதாரத் துறையினர் கண்காணித்து வருகின்றனர்.

Updated On: 23 Dec 2020 4:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    போலரைஸ்டு சன்கிளாஸ்ல அப்படி என்னதான் ஸ்பெஷல்?
  2. திருப்பூர்
    திருப்பூா் தொகுதி தோ்தல் வாக்கு எண்ணும் பணி; 1,274 முகவா்கள் நியமனம்
  3. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் திடீர் கோடை மழை!விவசாயிகள் பெரு மகிழ்ச்சி!
  4. லைஃப்ஸ்டைல்
    அன்பையும், அர்ப்பணிப்பையும் கொண்டாடும் "வயிர கல்யாணம்"
  5. காஞ்சிபுரம்
    திருமுக்கூடல் ஸ்ரீ செல்லியம்மன் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  6. திருப்பூர்
    ஜவுளி உற்பத்தியாளா்கள் ஒப்பந்த கூலியை வழங்க நடவடிக்கை எடுக்க...
  7. லைஃப்ஸ்டைல்
    ஆண்களுக்கான சரியான சன்கிளாஸ் தேர்வு செய்வது எப்படி?
  8. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் புண்ணிய கோடீஸ்வரர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  9. நாமக்கல்
    வைகாசி மாத முதல் ஞாயிற்றுக்கிழமை ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரம்
  10. லைஃப்ஸ்டைல்
    சரஸ்வதி பூஜையின் தோற்றமும் வாழ்த்துக்களும்