/* */

சென்னையில் மது போதையில் தந்தையை கொன்ற மகன் கைது

சென்னை, எம்ஜிஆர் நகரில், மது போதையில் தந்தையை கொலை செய்த மகனை, போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

சென்னையில் மது போதையில் தந்தையை கொன்ற மகன் கைது
X

சென்னை எம்ஜிஆர் நகர், சூளைபள்ளம் வெங்கட்ராமன் சாலையைச் சேர்ந்தவர் செல்வம், (47). இவர், ஜாபர்கான்பேட்டை, ஆர்.வி.நகரில் மீன் வியாபாரம் செய்து வந்தார். இவரது மனைவி சுமதி, 44. இவர்களுக்கு பிரகாஷ், 20, என்ற மகன் உள்ளார்.

மதுவுக்கு அடிமாகி, போதையில் பிரகாஷ், அடிக்கடி வீட்டில் தகராறு செய்து வந்தார். இதனால் விரக்தியடைந்த செல்வம், சில ஆண்டுகளுக்கு முன், மகனை வீட்டை விட்டு வெளியேற்றினார். இதையடுத்து, துர்க்கையம்மன் தெருவில் பிரகாஷ் தங்கி வந்தார்.

இந்நிலையில், நேற்றிரவு பிரகாஷ் தனது தாயை பார்ப்பதற்காக வீட்டிற்கு சென்றார். அப்போது, மது போதையில் இருந்ததால், தந்தைக்கும் மகனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த பிரகாஷ், கத்தியால் தந்தையின் பின் கழுத்து மற்றும் வயிற்றில் குத்தினார். இதில், மயங்கி விழுந்த செல்வத்தை, அவரது மனைவி மீட்டு, கே.கே.நகர் அரசு மருத்துவமனையில் சேர்த்தார்.

அங்கு மருத்துவ பரிசோதனையில் அவர் இறந்தது தெரியவந்தது. தகவல் அறிந்த எம்.ஜி.ஆர். நகர் போலீசார், பிரகாஷை கைது செய்து சிறையில் அடைத்தனர். மது போதையில் தந்தையை மகன் குத்தி கொலை செய்தது, விருகம்பாக்கம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Updated On: 13 Sep 2021 5:00 AM GMT

Related News

Latest News

  1. உலகம்
    கடந்த ஆண்டில் வெளுத்துவிட்ட உலகின் 60% க்கும் மேற்பட்ட பவளப்பாறைகள்
  2. அரசியல்
    சீனாவை எதிர்க்க இந்தியாவுக்கு தைரியம் இருக்கா? படீங்க உங்களுக்கே...
  3. மேட்டுப்பாளையம்
    கனமழை காரணமாக மண் சரிவு : மேட்டுப்பாளையம் - உதகை மலை ரயில் ரத்து..!
  4. தொழில்நுட்பம்
    550 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள டிரிபிள்-ஸ்டார் சிஸ்டத்தை கைப்பற்றிய...
  5. உலகம்
    எகிப்தியர்கள் பிரமிடுகளை எவ்வாறு கட்டினார்கள் என்ற மர்மத்துக்கு...
  6. வீடியோ
    NO பருப்பு NO பாமாயில் எதனால் இந்த நிலைமை || #mkstalin #tngovt...
  7. இந்தியா
    அச்சம் தந்த அக்னி..! பயணிகள் பேருந்து தீவிபத்தில் 10 பேர் கருகி...
  8. பூந்தமல்லி
    வழி தவறி சென்ற குழந்தைகளை ஒரு மணி நேரத்தில் மீட்டு கொடுத்த...
  9. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  10. திருவண்ணாமலை
    கிரிவலப் பாதையில் இருசக்கர வாகனத்தை திருட முயன்றவர்களை போலீசில்...