சைதாப்பேட்டை சிறையில் சொகுசு வசதிகள்: முன்னாள் அமைச்சர் மணிகண்டன் புழல் சிறைக்கு மாற்றம்

சைதாப்பேட்டை சிறையில் சொகுசு வசதிகள்: முன்னாள் அமைச்சர் மணிகண்டன் புழல் சிறைக்கு மாற்றம்
X

முன்னாள் அமைச்சர் மணிகண்டன் (பைல் படம்)

சைதாப்பேட்டை கிளைச் சிறையில் முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு சொகுசு வசதிகள் செய்யப்பட்டிருப்பதாக சிறைத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்ததின் பேரில் மணிகண்டன் இன்று புழல் சிறைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

சென்னை : அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் மணிகண்டன் தன்னை திருமணம் செய்வதாக ஏமற்றியதாகவும் அதனால் தான் கர்ப்பம் அடைந்து பின்னர் அவரது மிரட்டலின் பேரில் கருவை கலைத்ததாகவும் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நடிகை சாந்தினி புகார் அளித்ததின் பேரில் போலீசார் அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சைதாப்பேட்டை கிளைச் சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில் சைதாப்பேட்டை கிளைச் சிறையில் மணிகண்டனுக்கு செல்போன், ஏ.சி., சோபா உள்ளிட்ட சொகுசு வசதிகள் செய்யப்பட்டிருப்பதாக சிறைத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து சிறைத்துறை டி.எஸ்.பி. தலைமையில் சைதாப்பேட்டை கிளைச் சிறையில் போலீசார் நடத்திய திடீர் சோதனையில் மணிகண்டனுக்கு சொகுசு வசதிகள் செய்யப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதன் அடிப்படையில் மணிகண்டன் இன்று புழல் சிறைக்கு மாற்றப்பட்டுள்ளார். மேலும் மணிகண்டனுக்கு சிறையில் சொகுசு வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்த காவலர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உயர் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

Tags

Next Story
AI மரங்களை நடவு செய்வதில் புரட்சி: சரியான இடத்தை எப்படி கண்டுபிடிப்பது?