/* */

சென்னையில் விரைவில் டெல்டா பிளஸ் பரிசோதனை மையம் அமைக்கப்படும் : அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

சென்னையில் விரைவில் டெல்டா பிளஸ் பரிசோதனை மையம் அமைக்கப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

HIGHLIGHTS

சென்னையில் விரைவில் டெல்டா பிளஸ் பரிசோதனை மையம் அமைக்கப்படும் : அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
X

சென்னை கோட்டூர் புரத்தில் பேட்டி அளித்த அமைச்சர் மா.சுப்ரமணியன்.

சென்னை கோட்டூர்புரத்தில் செய்தியாளர்களை சந்தித்த மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது.

தடுப்பூசி போடும் பணி விரைவாக நடைபெற்று வருவதாகவும், நேற்று முதல் கர்ப்பிணி பெண்களுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கியது என்றும் தெரிவித்தார்.

மேலும் இதுவரை 1,57,76,550 தடுப்பூசி வந்துள்ளது என்றும், அதில் 1,56,74,489 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதாகவும், நேற்று தான் 4 லட்சம் அளவிற்கு ஒரே நாளில் தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளதாகவும் கூறினார்.

அதேபோல் தற்போது 2 லட்சம் அளவிற்கு தடுப்பூசி கையிருப்பு உள்ளதாக கூறிய அமைச்சர், மத்திய அரசிடம் இருந்து இன்றோ, நாளையோ தடுப்பூசி வரும் என்றார். அதுமட்டுமின்றி இந்த மாதம் மத்திய அரசின் ஒதுக்கீட்டில் இதுவரை 10 லட்சம் தடுப்பூசி வந்துள்ளதாகவும், மீதமுள்ள 61 லட்சமும் தொடர்ந்து அனுப்பப்படும் என்று எதிர்பார்க்கப்பதாக கூறினார்.

தொடர்ந்து பேசிய அமைச்சர், டெல்டா பிளஸ் பரிசோதனை மையம் 2 இடங்கயில் அமைக்கப்படும் என்றும், ஏற்கனவே அதற்கான பணிகள் நடைபெற்று வருவதாகவும், 25 நாட்களுக்களில் அமையும் என்று கூறினார். அதேபோல் மற்றொன்று, எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக்கழகத்தில் உள்ள ஆர்.டி.பி.சி.ஆர் மையத்தை மேம்படுத்தி 15 நாட்களில் பரிசோதனை அமைக்கப்படும் எனவும் கூறினார்.

இந்நிலையில் கோவாக்சின் தட்டுப்பாடு குறித்த கேள்விக்கு, மத்திய அரசு எந்த தடுப்பு மருந்தை அளித்தாலும் அதனை பிரித்து அனுப்பப்பட்டு வருவதாகவும், கோவாக்சின் 2ம் டோஸ் செலுத்தி கொள்ளும் பொதுமக்களுக்கு தேவையான மருந்து உள்ளது என்றார்.

Updated On: 4 July 2021 11:30 AM GMT

Related News

Latest News

  1. சோழவந்தான்
    சோழவந்தான் அருகே முள்ளிப்பள்ளத்தில் இலவச இருதய மருத்துவ முகாம்..!
  2. ஆலங்குளம்
    ஆலங்குளம் அருகே நூதன முறையில் பண மோசடி : 4 பேர் கைது..!
  3. குமாரபாளையம்
    சேலம் கோவை புறவழிச் சாலை பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல்
  4. காஞ்சிபுரம்
    செய்யாறு பாலத்தில் எல்இடி விளக்குகள் பொருத்தும் பணி
  5. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் 30 நிமிட கோடை மழை : பொதுமக்கள் மகிழ்ச்சி..!
  6. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் வீரர் கின்னஸ் உலக சாதனை முயற்சியில் வெற்றி
  7. தொழில்நுட்பம்
    செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்ப பயன்பாடு இரட்டிப்பு வளர்ச்சி..!
  8. குமாரபாளையம்
    நீர் தெளிப்பான் அமைக்கப்பட்ட முதியோர் இல்லம்..!
  9. நாமக்கல்
    பரமத்தி வேலூரில் ஸ்ரீ சங்கர ஜெயந்தி விழா கோலாகலம்..!
  10. நாமக்கல்
    நாமக்கல் தெற்கு அரசு பள்ளி மாணவர்கள் பொருளியலில் 100க்கு 100...