/* */

சென்னை: வேலைவாய்ப்பு பயிற்சித்துறை ஆய்வுக் கூட்டம் - அமைச்சர் சி.வி கணேசன் பங்கேற்பு

சென்னை: வேலைவாய்ப்பு பயிற்சித்துறை ஆய்வுக் கூட்டம் - அமைச்சர் சி.வி கணேசன் பங்கேற்பு
X

சென்னை கிண்டி தொழிற்பேட்டையில் உள்ள வேலைவாய்ப்பு பயிற்சித்துறை இயக்குனர் அலுவலகத்தில் தமிழகத்தில் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை செயல்பாடுகள் குறித்து ஆய்வுக் கூட்டம் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வி கணேசன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், தமிழகத்தில் கொரோனா சூழ்நிலை காரணம் காட்டி நிறுவனங்கள் வேலை பார்க்கும் ஊழியர்களை வேலையை விட்டு நிறுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும் குழந்தை தொழிலாளர்கள் இல்லாத நிலையை தமிழகத்தில் உருவாக்க பல்வேறு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது.கொரோனா காலத்தில் வீட்டிலிருந்து 8 மணிநேரம் மட்டுமே பணி செய்ய வேண்டும். 8 மணிநேரத்திற்கு மேலாக பணிகள் செய்ய வற்புறுத்தும் நிறுவனங்களின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் மேலும் நிர்ணயம் செய்த கால அளவை மீறி தொழிலாளர்களை வேலை செய்ய வற்புறுத்தினால் 1098 என்ற எண்ணில் புகார் அளிக்கலாம் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இக்கூட்டத்தில் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்குனர் கொ.வீர ராகவ ராவ் மற்றும் உயர் அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 12 Jun 2021 4:26 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    தொலை தொடர்புத் துறை பெயரில் போலி அழைப்புகள்: மத்திய அரசு எச்சரிக்கை
  2. லைஃப்ஸ்டைல்
    அன்னைக்கு இன்னைக்கு பிறந்தநாள்..! வாழ்த்துகிறோம்..!
  3. லைஃப்ஸ்டைல்
    வார்த்தைகளால் பூ தொடுத்து அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  4. இந்தியா
    உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த நான்கு மாத குழந்தை!
  5. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி கோர்ட்டில் ஆஜர்: சவுக்கு சங்கர் லால்குடி கிளை சிறையில்...
  6. லைஃப்ஸ்டைல்
    வீட்டில் இருந்தபடியே பெண்கள் சம்பாதிப்பது எப்படி?
  7. ஆன்மீகம்
    நடப்பாண்டில் வைகாசி விசாகம் எப்போது வருகிறது தெரியுமா?
  8. லைஃப்ஸ்டைல்
    ருசியான எண்ணெய் கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி?
  9. கல்வி
    எமிஸ் தளத்தில் பொது மாறுதல் கேட்டு விண்ணப்பித்த 13,484 ஆசிரியர்கள்
  10. லைஃப்ஸ்டைல்
    தாலியில் கருப்பு மணிகள் சேர்த்து அணிவது ஏன் என்று தெரியுமா?