/* */

சென்னை விமான நிலையத்தில் நூதன முறையில் தங்கம் கடத்தி வந்த 3 பேர் கைது

இலங்கையில் இருந்து நூதன முறையில் தங்கம் கடத்தி வந்த 3 பேரை சென்னை விமான நிலையத்தில் சுங்க இலாகா அதிகாரிகள் கைது செய்தனர்.

HIGHLIGHTS

சென்னை விமான நிலையத்தில் நூதன முறையில் தங்கம் கடத்தி வந்த 3 பேர் கைது
X
சென்னை விமான நிலையத்தில்  பசை வடிவில் கடத்தி வரப்பட்ட தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

இலங்கையிலிருந்து இண்டிகோ ஏா்லைன்ஸ் விமானம் இன்று காலை சென்னை சா்வதேச விமானநிலையம் வந்தது.அதில் வந்த பயணிகளை சென்னை விமானநிலைய சுங்கத்துறையினா் சோதனையிட்டனா்.

அப்போது ராமநாதபுரத்தை சோ்ந்த 3 ஆண் பயணிகள் ஒரு குழுவாக அந்த விமானத்தில் வந்தனா்.சுங்கத்துறையினருக்கு அவா்கள் மீது சந்தேகம் ஏற்பட்டது.இதையடுத்து அவா்களை நிறுத்தி விசாரித்தனா்.அப்போது அவா்கள் முன்னுக்குப்பின் முரணாக பேசினா்.

இதையடுத்து அவா்களை தனி அறைக்கு அழைத்து சென்று சோதனையிட்டனா்.அவா்களுடைய உள்ளாடைகளுக்குள் மறைத்து வைத்திருந்த 3 உருளைகளை கைப்பற்றினா்.அவைகளை திறந்து பாா்த்தபோது,தங்கப்பசைகளை மறைத்து வைத்திருந்ததை கண்டுப்பிடித்தனா்.

அந்த 3 உருளைகளிலும் 852 கிராம் தங்கப்பசையை கைப்பற்றினா்.அதன் மதிப்பு ரூ.37.88 லட்சம்.இதையடுத்து கடத்தல் பயணிகள் 3 பேரையும் சுங்கத்துறையினா் கைது செய்து மேலும் விசாரணை நடத்துகின்றனா்.

Updated On: 17 Jan 2022 3:00 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    புத்தாண்டு நல்வாழ்த்துகள்: வாழ்க்கையை வண்ணமயமாக்கும் பொன்மொழிகள்
  2. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் இரண்டு மணி நேரம் கொட்டிய கனமழை
  3. வீடியோ
    நாடாளுமன்றத்துக்கு வந்தது புதிய படை!அப்படி என்ன சிறப்பு ! || #crpf...
  4. லைஃப்ஸ்டைல்
    அறுபதாம் அகவை வாழ்த்துக்கள்: ஒரு புதிய அத்தியாயத்தின் ஆரம்பம்
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பு வாழும் கூடு..! புதுமனை புகுவிழா வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் இனிய பாடலுக்கு இதயப்பூர்வமான வாழ்த்துகள்
  7. குமாரபாளையம்
    சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு
  8. ஈரோடு
    சென்னிமலையில் வீடுகளுக்குள் புகுந்த மழை வெள்ளம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    சுருங்க சொல்லி விளங்க வைக்கிறேன்..! SMS பிறந்தநாள் வாழ்த்து..!
  10. குமாரபாளையம்
    அரசு அனுமதியின்றி செயல்பட்ட பார் மூடல்; கலெக்டர் உத்தரவு