மறைந்த மூத்த கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் தா.பாண்டியனின் படத்திறப்பு விழா

மறைந்த மூத்த கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் தா.பாண்டியனின் படத்திறப்பு விழா
X

சென்னை எழும்பூர் பெரியார் திடலில் நடைபெற்ற மறைந்த மூத்த கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் தா.பாண்டியனின் படத்திறப்பு விழா.

மறைந்த மூத்த கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் தா.பாண்டியனின் படத்திறப்பு விழா நிகழ்ச்சி சென்னை எழும்பூர் பெரியார் திடலில் நடைபெற்றது.

மறைந்த மூத்த கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் தா.பாண்டியனின் படத்திறப்பு விழா மற்றும் புகழஞ்சலி நிகழ்ச்சி சென்னை எழும்பூர் பெரியார் திடலில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் தா.பாண்டியன் அவர்களின் திரு உருவப் படத்தை கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு திறந்து வைத்தார்.

மேலும் இந்த நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின்,அமைச்சர் சேகர்பாபு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் டி ராஜா, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், திராவிடர் கழகம் தலைவர் கீ.வீரமணி, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே எஸ் அழகிரி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன்,தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா ஆகியோர் கலந்துகொண்டு புகழ் அஞ்சலி செலுத்தினர்.

பின்னர் நிகழ்ச்சியில் பேசிய முதல்வர், தோழர் தா.பாண்டியன் என்றாலே தலை தாழாத பாண்டியன் என்றுதான் பொருள்.எப்போதும் யாருக்கும் அஞ்சாத நபராக மட்டுமே அவர் இருந்தார்.

திமுகவிற்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கும் உள்ளது வெறும் நட்பு உறவு அல்ல ,இது ஒரு குடும்பம் சாதாரண குடும்பம் அல்ல கொள்கை குடும்பம்.

பாசிச பாஜகவுக்கும் , அடிமை அதிமுகவுக்கும் பாடம் புகட்ட கூடிய தேர்தலாக கடந்த தேர்தல் இருக்கும் என கூறினேன், அந்த பாடத்தை தமிழக மக்கள் புகட்டிவிட்டனர்.

இந்திய அளவில் இந்த பாடத்தை யாருக்கு புகட்ட வேண்டுமோ அவர்களுக்கு பாடம் புகட்ட அனைவரும் உறுதி ஏற்று கொள்ள வேண்டும்.

மதுரையில் நடைபெற்ற மாநாட்டில் ஆட்சி மாற்றம் வேண்டும் என தா.பாண்டியன் பேசியிருந்தார் தற்போது அவர் இல்லை என்பது கவலை அளிக்கிறது.

தமிழ்நாட்டில் அதிமுக ஆட்சியை வீழ்த்த வேண்டும் என சபதம் எடுத்தார்,வெற்றி விழா கூட்டத்தில் சந்திப்போம் என முழங்கினார் இவள்ளவு பெரிய வெற்றியை அவர் பார்க்கவில்லை என்ற சோகம் வாட்டி வதைக்கிறது.

மரணத்திற்கு பின்பும் சிவப்பு படையை தட்டி எழுப்பும் சிறப்பு கொண்டவர் தா.பாண்டியன். மிக பெரிய கருத்துகளை பாமர மக்களுக்கு புரியும் அளவிற்கு பேச கூடிய திறமை படைத்தவர். அரசியல் கடந்து இலக்கிய ஆளுமை பெற்றவர் தா.பாண்டியன்,மேடை பேச்சு எழுத்துலகம் என சிறப்பாக செயல்பட்டவர். நித்தமும் எழுதியும், பேசியும், போராடியும், வாதடியும் வந்தவர் தா.பாண்டியன்.

திராவிட இயக்கமும் பொதுவுடமை இயக்கமும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என தா.பாண்டியன் எப்போதும் கூறுவார். அதைத்தான் நாம் தற்போது பின்பற்றி வருகிறோம் ,நமக்குள் உள்ளது தேர்தல் உறவு அல்ல கொள்கை உணர்வு என பேசினார்.

Tags

Next Story