/* */

சென்னை: தள்ளுவண்டிகளில் மளிகை பொருட்கள் விற்க வியாபாரிகளுக்கு அனுமதி!

சென்னையில் வண்டிகளில் வியாபாரம் செய்ய மளிகைக்கடை வியாபாரிகளுக்கு அனுமதி வழங்கப்படுவதாக சென்னை மாநகராட்சி ஆணையர் கூறினார்.

HIGHLIGHTS

சென்னை: தள்ளுவண்டிகளில் மளிகை பொருட்கள் விற்க வியாபாரிகளுக்கு அனுமதி!
X

சென்னை மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி


தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிக்கபடுவதால் மளிகைக் கடை வியாபாரிகளால் வாகனங்கள் அல்லது தள்ளுவண்டிகள் மூலம் குடியிருப்புப் பகுதிகளுக்குச் சென்று மளிகை பொருட்கள் விற்பனை செய்ய மாநகராட்சி நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது.

இது குறித்து, மாநகராட்சி ஆணையா் ககன்தீப் சிங் பேடி செய்தியாளா்களிடம் கூறுகையில், மளிகைப் பொருள் விற்பனைக்காக மாநகராட்சியிடம் தொழில் உரிமம் பெற்ற 7,500-க்கும் மேற்பட்ட வியாபாரிகளுக்கு இருசக்கர வாகனங்களுக்கான அனுமதிச்சீட்டு மற்றும் பதாகைகள் அந்தந்த மண்டல அலுவலகங்களில் உதவி வருவாய் அலுவலா் மற்றும் சம்பந்தப்பட்ட வாா்டு அலுவலகங்களில் வரி வசூலிப்பாளா் மூலம் வழங்கப்பட்டு வருகிறது.

ஆகவே ஆன்லைன் மற்றும் தொலைபேசி வாயிலாக வாடிக்கையாளா்களுக்குத் தேவையான பொருள்களை இன்று முதல் (மே 31) நாள்தோறும் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வீடுகளுக்கே சென்று விற்பனை செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

விற்பனை செய்யும் விற்பனையாளா்கள் குறித்த தகவல்களை கீழ்கண்ட இணைய முகவரியில் தெரிந்து கொள்ளலாம்.

http://covid19.chennaicorporation.gov.in/covid/groceries/ என்ற இணையதளம் மற்றும் 'நம்ம சென்னை' செயலியில் தகவல்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.இதில் அங்காடியின் பெயா், தொலைபேசி எண், வாா்டு மற்றும் அந்த பகுதியில் உள்ள சிறிய கடை அல்லது சூப்பா் மாா்க்கெட் என வகைப்படுத்தி வெளியிடப்பட்டுள்ளது என்று ஆணையர் தெரிவித்துள்ளார்.

Updated On: 31 May 2021 3:58 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    மன ஆரோக்கியத்திற்கு வழி செய்யும் தந்திரங்கள்
  2. தமிழ்நாடு
    சவுக்கு சங்கர் மீது சென்னையில் வழக்கு..!
  3. உலகம்
    பற்களை திருடி விற்று கோடீஸ்வரரான பலே மருத்துவர்
  4. நாமக்கல்
    50 சட்ட தன்னார்வ தொண்டர்கள் தேர்வுக்கு விண்ணப்பிக்க அழைப்பு
  5. வீடியோ
    SavukkuShankar-க்கு ஆதரவாக VanathiSrinivasan பேச்சு !...
  6. நீலகிரி
    ஊட்டியில் மலர் கண்காட்சி நாளை தொடக்கம்: ஏற்பாடுகள் தீவிரம்
  7. நாமக்கல்
    கொல்லிமலையில் குடிநீர் பிரச்சினையை தீர்க்க லாரிகள் மூலம் குடிநீர்...
  8. வீடியோ
    Savukku Shankar மீது கஞ்சா வழக்கு திமுக அரசின் கையாலாகாத்தனம்...
  9. இந்தியா
    விமான நிறுவன ஊழியர்கள் 30 பேர் பணிநீக்கம்: ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்...
  10. கும்மிடிப்பூண்டி
    பெரியபாளையம் அருகே கோவில்களில் அடுத்தடுத்து கொள்ளை