/* */

வேளச்சேரி தொகுதி மறுவாக்குப் பதிவு: டாஸ்மாக் மூட உத்தரவு

வேளச்சேரி தொகுதியில் மறுவாக்குப் பதிவு நடப்பதையொட்டி இன்று காலை 10 மணி முதல் மதுபானக்கடைகளை மூட சென்னை மாநகராட்சி உத்தரவு பிறப்பித்துள்ளது

HIGHLIGHTS

வேளச்சேரி தொகுதி மறுவாக்குப் பதிவு: டாஸ்மாக் மூட உத்தரவு
X

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட வேளச்சேரி சட்டமன்ற தொகுதியில் வாக்கு பதிவு மய்யம் 92&ல் 17ம் தேதி மறு வாக்கு பதிவு நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது.

அதன்படி தேர்தல் 17ம் தேதி நடைபெற உள்ளது. இதனையொட்டி வாக்கு பதிவு நடைபெறும் பகுதியில் உள்ள டாஸ் மாக் கடைகள் இன்று முதல் 17ம் தேதி நள்ளிரவு 12 மணிவரை அனைத்து வகையான பார்கள், மதுபான கடைகள் மூடப்பட வேண்டும். தவறும் பட்சத்தில் மதுபான சட்ட விதிகளின் படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

Updated On: 15 April 2021 1:15 AM GMT

Related News