/* */

சர்வதேச பயணியருக்கான ஆர்டி-பிசிஆர் சோதனை நேரம் 3 மணி நேரமாக குறைப்பு

சென்னை விமான நிலையத்தில், சர்வதேச பயணியருக்கான ஆர்டி-பிசிஆர் சோதனை நேரம் 3 மணி நேரமாக குறைக்கப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

சர்வதேச பயணியருக்கான ஆர்டி-பிசிஆர் சோதனை நேரம் 3 மணி நேரமாக குறைப்பு
X

சென்னை விமான நிலைய இயக்குனர் சரத்குமார்

சென்னை விமான நிலையத்தில், ஒமிக்ரான் அதிகம் பாதித்த நாடுகளில் இருந்து வரும் சர்வதேச பயணியருக்கான அர்டிபிசிஆர் சோதனை முடிவுகள் வெளியிடும் நேரம் 3 மணி நேரமாக குறைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சென்னை விமான நிலைய இயக்குனர் சரத்குமார் அளித்த பேட்டி: கொரோனா ஒமிக்ரான் பாதித்த நாடுகளில் இருந்து வரும் சர்வதேச பயணியருக்கு, பல்வேறு வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளன. இதன்படி ரேபிட் சோதனை செய்வதற்கான கட்டணம் ரூ.3400லிருந்து ரூ.2,900 குறைக்கப்பட்டுள்ளது. இதேபோல ஆர்டிபிஆர் சோதனை கட்டணம் ரூ.600 ஆக குறைக்கப்பட்டு உள்ளது.

மேலும், ரேபிட் சோதனை முடிவுகள் வெளியிடும் நேரம், ஒரு மணி நேரத்தில் இருந்து 30 நிமிடமாக குறைக்கப்பட்டுள்ளது. இதைப்போல் ஆர்டிபிசிஆர் சோதனை நேர முடிவுகள் வெளியிடும் நேரம், 3 மணி நேரமாகவும் குறைக்கப்பட்டுள்ளது. இன்றில் இருந்து ஒமிக்ரான் பாதித்த நாடுகளில் இருந்து வரும் பயணியருக்கு, சோதனை கட்டாயம் என்ற பட்டியலில் இருந்து, சிங்கப்பூர் நாடு நீக்கப்பட்டுள்ளது. டெல்டா வைரசை விட ஒமிக்ரான் வைரஸ் அதிக பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பதால் அதிக பயணியரிடம் கூடுதல் கவனம் செலுத்தப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Updated On: 9 Dec 2021 1:30 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    காலை வணக்கம் சொல்லும் இளம்காலை நேரக்காற்று!
  2. இந்தியா
    போதையில் கார் ஓட்டி ஏற்படுத்திய விபத்தில் 2 பேர் உயிரிழப்பு :...
  3. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை
  4. கோவை மாநகர்
    பெங்களூரு குண்டுவெடிப்பு தொடர்பாக கோவையில் என்.ஐ.ஏ. சோதனை
  5. தென்காசி
    தென்காசி மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை
  6. பொன்னேரி
    தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்த 2.வயது சிறுமி உயிரிழப்பு
  7. ஆன்மீகம்
    புத்த பூர்ணிமா எப்படி கொண்டாடுகிறோம்..?
  8. லைஃப்ஸ்டைல்
    தீபாவளி பண்டிகையும் மற்ற மாநிலங்களில் கொண்டாடும் விதமும்
  9. பூந்தமல்லி
    வெங்கல் அருகே லாரிகளை சிறை பிடித்து மக்கள் போராட்டம்
  10. ஆன்மீகம்
    தமிழக கோயில்களில் யாழிக்கு தனி இடம் ஒதுக்க காரணம் என்ன?