/* */

பெண்ணின் கழுத்தை அறுத்து தப்பி ஓடிய வாலிபர் -மடக்கி பிடித்த போலீசார்

வீட்டில் தனியாக படுத்துக் கொண்டிருந்த பெண்ணின் கழுத்தை அறுத்து விட்டு தப்பிச் சென்ற மர்ம நபரை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

பெண்ணின் கழுத்தை அறுத்து தப்பி ஓடிய வாலிபர் -மடக்கி பிடித்த போலீசார்
X

வீட்டில் தனியாக படுத்துக் கொண்டிருந்த பெண்ணின் கழுத்தை அறுத்து விட்டு தப்பிச் சென்ற மர்ம நபரை போலீசார் கைது செய்தனர். சென்னை வேளச்சேரி, எம்.ஜி.ஆர்.நகர், 2வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் ரமேஷ் இவர் ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி கல்பனா(எ) அலமேலு(30), இவர் கடந்த 7ம் தேதி, தனது பிள்ளைகள் இருவரை பள்ளிக்கு அனுப்பிவிட்டு மதியம் வீட்டில் படுத்து கொண்டிருந்தார். அப்போது யாரும் இல்லாத நேரத்தை பயன்படுத்தி சுமார் 30 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் கல்பனாவின் கழுத்தை கத்தியால் அறுத்து விட்டு தப்பிச் சென்றுள்ளார்.

பள்ளியில் இருந்து பிள்ளைகளை அழைத்து வர மதியம், தாய் வராததால் பள்ளியில் இருந்து ரமேஷிற்கு தகவல் தெரிவித்துள்ளார். ரமேஷ் அவரது தந்தைக்கு தகவல் தெரிவித்து பார்த்ததில் கழுத்து அறுபட்டு ரத்த வெள்ளத்தில் இருந்துள்ளார். அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் இராயபேட்டை அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு, பின்னர் தனியார் மருத்துவமனையில் தொடர் சிகிச்சை பெற்று வருகிறார்.

கழுத்தில் 8 தையலும், ஆள்காட்டி விரலில் 3 தையலும், நடுவிரலில் 1 தையலும் போடப்பட்டுள்ள்து. சிசிடிவி காட்சிகளை கைப்பற்றிய வேளச்சேரி போலீசார் கழுத்தை அறுத்து விட்டு தப்பியோடிய வேளச்சேரி கருணாம்பிகை காலனியை சேர்ந்த தட்சிணாமூர்த்தி (21), என்பவரை கைது செய்தனர். விசாரணையில் பெயிண்டர் வேலை செய்யும் இவர் திருட சென்ற போது மனம் மாறி கழுத்தை அறுத்துவிட்டதாக கூறியதாக போலீசார் தெரிவித்தனர். தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

Updated On: 11 April 2022 9:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    புத்தாண்டு நல்வாழ்த்துகள்: வாழ்க்கையை வண்ணமயமாக்கும் பொன்மொழிகள்
  2. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் இரண்டு மணி நேரம் கொட்டிய கனமழை
  3. வீடியோ
    நாடாளுமன்றத்துக்கு வந்தது புதிய படை!அப்படி என்ன சிறப்பு ! || #crpf...
  4. லைஃப்ஸ்டைல்
    அறுபதாம் அகவை வாழ்த்துக்கள்: ஒரு புதிய அத்தியாயத்தின் ஆரம்பம்
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பு வாழும் கூடு..! புதுமனை புகுவிழா வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் இனிய பாடலுக்கு இதயப்பூர்வமான வாழ்த்துகள்
  7. குமாரபாளையம்
    சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு
  8. ஈரோடு
    சென்னிமலையில் வீடுகளுக்குள் புகுந்த மழை வெள்ளம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    சுருங்க சொல்லி விளங்க வைக்கிறேன்..! SMS பிறந்தநாள் வாழ்த்து..!
  10. குமாரபாளையம்
    அரசு அனுமதியின்றி செயல்பட்ட பார் மூடல்; கலெக்டர் உத்தரவு