/* */

சென்னை விமானநிலையம் : மயங்கி விழுந்த பயணி உயிரிழப்பு

சென்னை விமான நிலையத்தில் மயங்கி விழுந்த பயணி உயிரிழந்தார்.

HIGHLIGHTS

சென்னை விமானநிலையம் : மயங்கி விழுந்த பயணி உயிரிழப்பு
X
பைல் படம்

சென்னையிலிருந்து கொல்கத்தா செல்ல வந்த கேன்சா் நோயாளி பயணி, சென்னை விமானநிலையத்திற்குள் மயங்கி விழுந்து உயிரிழந்தார்

மேற்கு வங்க மாநிலத்தை சோ்ந்தவா் சவ்விக் பெயின் (37). தனியாா் நிறுவனத்தில் வேலை செய்யும் இவா் கேன்சா் நோயாளால் பாதிக்கப்பட்டாா்.இதையடுத்து சவ்விக் பெயினை சிகிச்சைக்காக தமிழ்நாட்டில் உள்ள வேலூா் சிஎம்சி மருத்துவமனைக்கு 3 மாதங்களுக்கு முன்பு வந்தாா். மருத்துவ சிகிச்சை முடிந்து நேற்று டிஸ்சாா்ஜ் செய்யப்பட்டாா்.

இதையடுத்து சவுவிக் பெயினை அவருடைய தந்தை ஸ்வராஜ் குமாா் பெயின் அழைத்து கொண்டு சென்னை விமானநிலையம் வந்தாா். சென்னையிலிருந்து கொல்கத்தா செல்லும் இண்டிகோ ஏா்லைன்ஸ் விமானத்தில் நேற்று இரவு பயணம் செய்வதற்காக சென்னை உள்நாட்டு விமானநிலையம் வந்து அமா்ந்திருந்தனா்.

அப்போது திடீரென சவுவிக் பெயின் மயங்கி விழுந்தாா்.இதையடுத்து உடனடியாக அவரை சென்னை விமானநிலையத்தில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு எடுத்து சென்றனா்.அங்கு மருத்துவா்கள் பரிசோதித்துவிட்டு,அவா் ஏற்கனவே உயிரிழந்ததாக அறிவித்தனா்.

இதையடுத்து சென்னை விமானநிலைய போலீசாா் விரைந்து வந்து,சவுவிக் பெயின் உடலை கைப்பற்றி,பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.அதோடு இதுபற்றி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனா்.

Updated On: 7 Nov 2021 10:07 AM GMT

Related News

Latest News

  1. திருவள்ளூர்
    மின்சாரம்,குடிநீர் தட்டுப்பாடு : பொதுமக்கள் சாலை மறியல்..!
  2. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியம் தரும் முருங்கைக் கீரை சூப் செய்வது எப்படி?
  3. உலகம்
    இன்னலுறும் நோயாளிகளுக்கு உதவும் செவிலியரை போற்றுவோம்..! நாளை செவிலியர்...
  4. வீடியோ
    சபையில் வைத்து கிழிக்கப்பட்ட ஐ.நா தீர்மானம் | இது தான் காரணமா ?...
  5. வீடியோ
    🔴LIVE : பள்ளிக்கரணை ஆணவக்கொலை வழக்கு பற்றி மூத்த வழக்குரைஞர்...
  6. ஈரோடு
    ஈரோட்டில் பள்ளி வாகனங்களில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு
  7. நாமக்கல்
    நாமக்கல் காமராஜர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி 10ம் வகுப்பு தேர்வில் 100...
  8. லைஃப்ஸ்டைல்
    ஒரு டம்ளர் தண்ணீர், ஒரு டீ ஸ்பூன் நெய் : உடம்பு குறைய இது
  9. நாமக்கல்
    மோகனூர், பரமத்தி பகுதிகளில் வளர்ச்சி திட்டப்பணிகள்: ஆட்சியர் ஆய்வு
  10. ஈரோடு
    பவானி பகுதியில் 15 கிலோ அழுகிய பழங்கள் பறிமுதல்