/* */

சென்னை அடையார் ஆற்றில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு

சென்னை அடையார் ஆற்றில், அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்கப்பட்டது.

HIGHLIGHTS

சென்னை அடையார்  ஆற்றில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு
X

அடையார் பாலத்தின் கீழ் அடையாறு ஆற்றில் சடலத்தை மீட்கும் பணியில் ஈடுபட்ட மீட்புக்குழுவினர். 

சென்னை அடையார் திரு.வி.க. பாலத்தின் கீழ், அடையார் ஆற்றில் சுமார் 35 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் மிதப்பதாக அடையாறு காவல் நிலையத்திற்கு தகவல் வந்தது. இதையடுத்து அடையாறு போலீசார் மற்றும் மயிலாப்பூர் தீயணைப்பு துறை அதிகாரி இன்பராஜ் தலைமையில், ஆறு தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு வந்தனர்.

பின்னர், தீயணைப்பு வீரர்கள் ஆற்றில் இறங்கி தண்ணீரில் மிதந்த சடலத்தை மீட்டு, கரைக்கு கொண்டு வந்தனர்.
அடையார் போலீசார், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை ராயப்பேட்டை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து இறந்து கிடந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? எப்படி இறந்தார்? என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.

Updated On: 9 Nov 2021 10:00 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த நான்கு மாத குழந்தை!
  2. லைஃப்ஸ்டைல்
    வீட்டில் இருந்தபடியே பெண்கள் சம்பாதிப்பது எப்படி?
  3. ஆன்மீகம்
    நடப்பாண்டில் வைகாசி விசாகம் எப்போது வருகிறது தெரியுமா?
  4. லைஃப்ஸ்டைல்
    ருசியான எண்ணெய் கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    தாலியில் கருப்பு மணிகள் சேர்த்து அணிவது ஏன் என்று தெரியுமா?
  6. இந்தியா
    பணமோசடி வழக்கில் ஜார்க்கண்ட் அமைச்சர் ஆலம்கீர் ஆலம் கைது
  7. லைஃப்ஸ்டைல்
    என்னுயிரில் வாழ்பவளுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  8. உலகம்
    ஸ்லோவாக்கியாவின் பிரதமர் மீது பலமுறை சுடப்பட்டதையடுத்து, உடல்நிலை...
  9. உலகம்
    மாற்றியமைக்கப்பட்ட பன்றி சிறுநீரக மாற்று சிகிச்சையைப் பெற்றவர் மரணம்
  10. வீடியோ
    கலை அறிவியல் கல்லூரிகளில் அலைமோதும் கூட்டம் | இது தான் காரணமா ?TNGASA...