/* */

தமிழகத்துக்கு மேலும் 3.60 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் வருகை

தமிழ்நாட்டிற்கு மேலும் 3.60 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் புனேவிலிருந்து இன்று சென்னை வந்து சோ்ந்தன.

HIGHLIGHTS

தமிழகத்துக்கு மேலும் 3.60 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் வருகை
X

புனேவிலிருந்து சென்னை வந்தடைந்த தடுப்பூசிகள்.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் இரண்டாம் அலை மே மாதம் உச்சக்கட்ட பாதிப்பை ஏற்படுத்தியது.தமிழக அரசு எடுத்த தீவிர நடவடிக்கைகள், கடுமையான ஊரடங்கு கட்டுப்பாடுகளால், கொரோனா வைரஸ் பாதிப்பு தற்போது படிப்படியாக குறைந்து வருகிறது.

இரண்டாம் அலை பாதிப்பு கிட்டத்தட்ட முடிவடையும் நிலையில், கடந்த சில தினங்களாக சென்னை, செங்கல்பட்டு, கோவை உள்ளிட்ட மாவட்டங்கள் உட்பட தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தினசரி பாதிப்பு ஏற்றம் இறக்கத்துடன் அதிகரித்து வருகிறது.

இது கொரோனா வைரஸ் 3 ஆம் அலை தொடங்குவதற்கான அறிகுறியாக இருக்கக்கூடும் என்று மருத்துவ வல்லுனா்கள் குழு எச்சரித்துள்ளது. அதிலிருந்து தப்பிக்க 18 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் கொரோனா வைரஸ் தடுப்பூசிகளின் 2 டோஸ்களையும் உடனே போட்டுக்கொள்ள வேண்டும். அதோடு அனைவரும் மாஸ்க் அணிவது, பொது இடங்களில் சமூக இடைவெளியை கடைப்பிடிப்பதை தொடா்ந்து மக்கள் அனைவரும் கட்டாயமாக கடைப்பிடிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளது.

இதையடுத்து தமிழக அரசு மக்கள் அனைவரையும் கட்டாயமாக தடுப்பூசிகள் போடும்படி அறிவுறுத்தியுள்ளது. இதனால் மக்கள் அனைவரும் தடுப்பூசிகள் போட்டுக்கொள்வதில் மிகுந்த ஆா்வம் காட்டுகின்றனா். நீண்ட வரிசையில் காத்திருந்து தடுப்பூசிகளை போட்டுக்கொள்கின்றனா்.

எனவே தமிழகத்திற்கு கூடுதல் தடுப்பூசிகள் தேவைப்படுகின்றன. இதையடுத்து தமிழ்நாடு அரசு மத்திய அரசிடம் கூடுதலாக தமிழகத்திற்கு தடுப்பூசிகளை அனுப்பும்படி கோரிவருகிறது.

இந்நிலையில் மத்திய சுகாதாரத்துறை தமிழகத்திற்கு இன்று, மகராஷ்டிரா மாநிலம் புனேவில் உள்ள மத்திய மருந்து கிடங்கிலிருந்து 3,60,000 டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசிகளை விடுவித்தது. இந்த தடுப்பூசிகள் அடங்கிய 30 பாா்சல்கள் புனேவிலிருந்து சென்னை வரும் இண்டிகோ ஏா்லைன்ஸ் விமானத்தில் ஏற்றப்பட்டு, இன்று பகல் 12.10 மணிக்கு சென்னை விமானநிலையம் வந்து சோ்ந்தன.

உடனடியாக சென்னை விமானநிலைய லோடா்கள் தடுப்பூசி பாா்சல்களை விமானத்திலிருந்து கீழே இறக்கினா். அதன்பின்பு தடுப்பூசி பாா்சல்கள் தமிழ்நாடு அரசு மக்கள் நல்வாழ்வு துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது. அவா்கள் குளிா்சாதன வாகனங்களில் ஏற்றி, சென்னைக்கு தேனாம்பேட்டையில் டிஎம்எஸ் அலுவலகத்திற்கு எடுத்து சென்றனா். அங்கிருந்து தமிழகத்தில் பல்வேறு பகுதிகளுக்கு தேவைகளுக்கு ஏற்ப பிரித்து அனுப்பப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

Updated On: 11 Aug 2021 5:35 PM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  2. திருவண்ணாமலை
    எஸ் கே பி கல்வி குழுமத்தின் மாபெரும் ஓவியம், நடனம், திருக்குறள்,...
  3. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் தேவையற்ற புதைவட கேபிள்களை அகற்ற மனு
  4. குமாரபாளையம்
    பள்ளிபாளையத்தில் கனமழை: பிரதான சாலைகளில் சாய்ந்த இரு மரங்கள்
  5. லைஃப்ஸ்டைல்
    இல்லற வாழ்வில் நல்லறம் கண்ட தம்பதிக்கு வாழ்த்துகள்..!
  6. மேட்டுப்பாளையம்
    கோவில்பாளையம் பகுதியில் 2 கிலோ கஞ்சா சாக்லேட் பறிமுதல்..!
  7. தொழில்நுட்பம்
    சந்திரனில் முதல் ரயில் பாதை அமைக்க நாசா திட்டம்
  8. லைஃப்ஸ்டைல்
    கரம் கொடுத்த நீ, பிரியாத வரம் ஒன்று தாராய்..!
  9. லைஃப்ஸ்டைல்
    காதல் வானில் பறக்கும் ஜோடிக் கிளிகளுக்கு வாழ்த்துகள்..!
  10. வீடியோ
    🤔Ilaiyaraaja அப்புடி என்ன பண்ணிட்டாரு?RV Udhayakumar OpenTalk...