/* */

வரி ஆலோசகர்களுக்கு தனி நல வாரியம் -ஜிஎஸ்டி புரொபஷனல்ஸ் வேண்டுகோள்

ஜிஎஸ்டி ரிட்டன் தாக்கல் செய்யும் போர்ட்டலில் உள்ள சிரமங்களை களைய அரசுக்கு வேண்டுகோள்.

HIGHLIGHTS

வரி ஆலோசகர்களுக்கு தனி நல வாரியம் -ஜிஎஸ்டி புரொபஷனல்ஸ் வேண்டுகோள்
X

தமிழக ஜிஎஸ்டி புரொபஷனல்ஸ் சங்கத்தைச் சேர்ந்த 200க்கும் அதிகமாவனர்கள், ஜி.எஸ்.டி போர்ட்டலில் உள்ள சிரமங்களை களைவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னை, வள்ளுவர் கோட்டம் அருகில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஜிஎஸ்டி புரொபஷனல்ஸ் சங்க தலைவர் முகம்மது அஸ்கர் கூறியதாவது: ஜிஎஸ்டி போர்ட்டலில், ரிட்டர்ன் தாக்கல் செய்ய மாதம்தோறும், 11ம் தேதி கடைசி நாள். அன்று மாலை, 5 மணி முதல் அந்த போர்ட்டல் செயல்படுவதில்லை. அன்று நள்ளிரவு, 12 மணிக்கு மேல் ரிட்டன் தாக்கல் செய்தால், ஒரு நாளைக்கு, ரூ.200 ரூபாய் அபராதம் செலுத்த வேண்டியுள்ளது. மேலும், செலுத்த வேண்டிய வரிக்கும், வட்டி செலுத்த வேண்டும்.

மின்னணு முறையில் மாதம்தோறும் ரிட்டன் தாக்கல் செய்யப்படுகிறது. இதுதவிர, ஆண்டு ரிட்டன் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் தெரிவிக்கிறார்கள். ஜிஎஸ்டி போர்ட்டலில் உள்ள சிரமங்களை களைய நடவடிக்கை எடுப்பதுடன், ஆண்டு ரிட்டனை ரத்து செய்ய வேண்டும். அரசுக்கும், வியாபாரிகளுக்கும் இடையில் பாலமாக இருந்து, வரி வருவாயை ஈட்டி தரும், வரி ஆலோசகர் நலனுக்கென, தமிழக அரசு, தனி நல வாரியம் அமைத்து தர வேண்டும் என்றார்.

Updated On: 26 Sep 2021 3:44 AM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!