/* */

தடுப்பூசிகளில் எது சிறந்தது எனக் கூறுவது தவறான செய்தி, அமைச்சர் மா.சுப்பிரமணியன்

தடுப்பூசிகளில் எது சிறந்தது எனக் கூறுவது தவறான செய்தி என்று அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்தார்.

HIGHLIGHTS

தடுப்பூசிகளில் எது சிறந்தது எனக் கூறுவது தவறான செய்தி, அமைச்சர் மா.சுப்பிரமணியன்
X
சென்னை சைதாப்பேட்டையில் நடந்த நிகழ்ச்சியில் அமைச்சர் மா.சுப்ரமணியன் பேட்டி அளித்தார்.

சைதாப்பேட்டையில் உள்ள அண்ணை வேளாங்கண்ணி கல்லூரியில் தமிழ்நாடு மீடியா கேமராமேன் அசோசியேசன் சார்பில் பத்திரிக்கையாளர்களின் குடும்பங்களுக்கு நிவாரண உதவி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் பத்திரிக்கையாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

ஊடகத்துறையில் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய யுவராஜ் மரணத்திற்கு மௌன அஞ்சலி செலுத்தபட்டது.யுவராஜின் குடும்பத்திற்கு நிவரணத் தொகையை மக்கள் நல்வாழ்வுதுறை அமைச்சர் மா.சுப்ரமணியம் அவர்கள் வழங்கினார்.

மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியம் கூறியதாவது:

திராவிட முன்னேற்ற கழகத்தின் மூத்த தலைவர் கருணாநிதி அவர்கள் பத்திரிக்கையாளர்களை மிகவும் மதிக்க கூடியவர். பத்திரிக்கை செய்திகளை அடிப்படையாக வைத்து மிக துரிதமாக நடவடிக்கை எடுத்து வந்தவர்.

அவரைப் போலவே நமது முதல்வர் ஸ்டாலினும் பத்திரிக்கையில் வரும் அரசு தொடர்பான செய்திகள் அனைத்தையும் உன்னிப்பாக கவனித்து வருகிறார். எந்தத் துறையின் கீழ் செய்தி வருகிறதோ அவற்றை உடனடியாக நிவர்த்தி செய்ய உத்தரவிட்டுள்ளார்.

முதலமைச்சர் ஸ்டாலின் தான் பத்திரிகையாளர்களுக்கு என தனியே தடுப்பூசி முகாம் அமைக்க வேண்டும் என்று கூறினார்.

கொரோணா இரண்டாவது அலைக்கு செய்யப்பட்ட அனைத்து ஏற்பாடுகளும் அப்படியே இருக்கும். மூன்றாவது அலை வரும்பட்சத்தில் நம்மால் சமாளிக்க முடியும்.

கிங்ஸ் இன்ஸ்டிட்யூட்டில் பத்திரிக்கையாளர்களுக்கு என தனியே 25 படுக்கைகள் ஒதுக்க பட்டிருந்தன ஊட கவியாளர்களுக்கான படுக்கை சரிவர பயன்படுத்தப்படுகிறதா என்பதை நானே நேரடியாக கவனித்து வந்தேன் என்று கூறினார்.

நிகழ்ச்சி முடிந்த பின் பத்திரிகையாளர்களை சந்தித்த மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் கூறியதாவது.(பேட்டி)

தடுப்பூசி வருகைக்கு ஏற்ப மக்களை வரவழைத்து தடுப்பூசி போடும் பணி சிறப்பாக நடைபெற்று வருகிறது. அதனைமாவட்டஆட்சித்தலைவர்கள் கண்காணித்து வருகிறார்கள் என்றார்.

கர்ப்பிணித் தாய்மார்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வந்தால் முன்னுரிமை கொடுத்து முகாம்களில் பரிசோதித்து தடுப்பு ஊசி செலுத்தப்படும்.

சென்னையை பொறுத்தவரை முழுமையாக தொற்று குறைந்துள்ளது, தேவைப்படும்போது சிகிச்சை மையங்கள் பரிசோதனை மையங்கள் மற்றும் பணியாளர்கள் அதிகப்படுத்தப்படுவர்.

பெரிய அளவிலான சந்தோசம்என்ன என்றால் பொதுமக்களிடம் தடுப்பூசி செலுத்திக்கொள்ள ஆர்வம் உள்ளது தான்.போட்டி போட்டுக்கொண்டு தடுப்பூசி செலுத்திக் கொள்ளும் நிலை உருவாகியுள்ளது.

ஒன்றிய அரசிடம் வலியுறுத்தி கூடுதலாக தடுப்பூசி பெற்று கொண்டிருக்கிறோம்.இன்று இரவு அல்லது நாளை மேலும் தடுப்பூசிகள் வரும் என எதிர்பார்க்கிறோம் என்றார்.

மேலும் கோவிஷில்ட், கோவேக்சின் ஆகிய இரண்டு தடுப்பூசிகளும் தகுதியுள்ள தடுப்பூசிகள் தான். ஐ.சி.எம்.ஆர் சான்று அளித்த பிறகுதான் தடுப்பூசி போடப்படுகிறது என்றும் இடையில் உள்ளவர்கள் எது சிறந்த தடுப்பூசி என்று கூறி தவறான தகவல்களை பரப்புகின்றனர்.

ஒன்றிய அரசு என்ற வார்த்தை குறித்து ஓபிஎஸ் வெளியிட்ட அறிக்கைக்கு பதில் அளித்த அமைச்சர் :

தமிழிசை சௌந்தரராஜன் ஒன்றியத்திற்கு மிகச்சிறப்பான விளக்கத்தை புதுச்சேரி அமைச்சரவை பதவியேற்பு விழாவின் போது சொல்லியுள்ளார், ஓபிஎஸ் அவர்கள் நேரடியாக தமிழிசை சௌந்தரராஜன் அவர்களுக்கு தவறான திசையில் நீங்களும் செல்லாதீர்கள் என அறிவுரை சொல்லலாம் என்றார்.

முதல்வர் தொடர்ந்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார், காணொலி வாயிலாக இன்று கூட ஒரு பதிவை ஊடகங்களுக்கு வெளியிட்டிருக்கிறார். சென்னையில் கூட பத்து விழிப்புணர்வு வாகனங்கள் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்றார்.

Updated On: 4 July 2021 1:44 PM GMT

Related News

Latest News

  1. மதுரை மாநகர்
    ப்ளஸ் 2 தேர்வு: மதுரை மத்திய சிறையில் அதிக மதிப்பெண் ஒருவர் சாதனை
  2. லைஃப்ஸ்டைல்
    வெற்றியை ஊக்குவிக்கும் "ஜெத்து".. மேற்கோள்களும் விளக்கங்களும்
  3. லைஃப்ஸ்டைல்
    வாழ்வின் வழிகாட்டி: தமிழ் ஞானப் பொக்கிஷங்கள்
  4. லைஃப்ஸ்டைல்
    கோபத்தின் விஷம்: சினத்தை அமைதிப்படுத்தும் தமிழ் வரிகள்
  5. ஆன்மீகம்
    கிரக பெயர்ச்சியால் கலக்கமா..? அப்ப இதை படிங்க..!
  6. வழிகாட்டி
    ஒரு வரலாற்று கலாசாரம் முடிவுக்கு வருகிறது..!
  7. சினிமா
    ஒரு கோடி ரூபாய் ராயல்டி பெற்றாரா மணிரத்தினம்..?
  8. ஈரோடு
    சித்தோடு அருகே 810 கிலோ தங்கம் ஏற்றிச் சென்ற வாகனம் கவிழ்ந்து விபத்து
  9. தேனி
    வீரபாண்டி கௌமாரியம்மன் திருவிழா இன்று தொடங்கியது..!
  10. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்