/* */

ரயில் மோதி பெண் பலி

திருவொற்றியூர் அருகே செல்போனில் பேசிக்கொண்டு தண்டவாளத்தை கடந்த இளம் பெண் மீது ரயில் மோதி பலியானார்.

HIGHLIGHTS

ரயில் மோதி பெண் பலி
X

ரயில் மோதி பலியான ஷாலினி (கோப்பு படம்)

திருவள்ளூர் மாவட்டம், திருவெற்றியூர் அடுத்த எர்ணாவூர் பகுதியை சார்ந்த ஷாலினி (26) பட்டப்படிப்பு முடித்து ஆவடி பகுதியில் உள்ள அழகு நிலையத்தில் பணியாற்றி வந்தார்

வழக்கம்போல் ஷாலினி ஆவடியில் வேலை முடித்துவிட்டு, ரயிலில் ஏறி திருவொற்றியூர் விம்கோ நகர் பகுதியில் ரயிலில் இருந்து இறங்கினார். செல்போனில் பேசிக்கொண்டு ரயில் தண்டவாளத்தை கடக்க முயன்ற போது, ரயில் மோதியது. இதில் ஷாலினி தூக்கி வீசப்பட்டு உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.

ஷாலினி வீட்டுக்கு வராமல் நீண்ட நேரம் ஆனதால், குடும்பத்தினர் ஷாலினிக்கு போனில் தொடர்பு கொண்ட போது போன் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது இதனால், அதிர்ச்சி அடைந்த பெற்றோர் ஷாலினி நீண்ட நேரம் வராததால், ரயில் நிலையம் அருகே வந்து தேடிப் பார்த்தபோது அங்கு பலத்த காயங்களுடன் விழுந்து கிடந்தார். பதறிய குடும்பத்தினர், ஷாலினியை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் உடனடியாக மேல் சிகிச்சைக்கு பரிந்துரை செய்தனர் உடனடியாக அவரை சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், வரும் வழியிலேயே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது..

Updated On: 16 Jan 2023 2:15 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    🔴LIVE: சீமான் செய்தியாளர் சந்திப்பு | #Seeman #NTK #SrilankanTamils...
  2. லைஃப்ஸ்டைல்
    அம்மாவுக்கு சொல்லுங்க.. அவங்க ரொம்ப சந்தோஷப்படுவாங்க
  3. லைஃப்ஸ்டைல்
    கோவக்காய் சாப்பிட்டு இருக்கீங்களா? எடை குறைக்குமாம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    காலைப் பொழுதில் ஒரு புன்னகையுடன்: உங்கள் நாளை அழகாக்கும் ரகசியங்கள்
  5. கல்வி
    கொஞ்சம் கொஞ்சமாக காணாமல் போகும் கர்சிவ் ரைட்டிங் எனும் கையெழுத்துக்...
  6. உலகம்
    ஆறுமாத குழந்தை மீது பலமுறை துப்பாக்கிச்சூடு..! தந்தை கைது..!
  7. திருவள்ளூர்
    பழுதடைந்த குடிநீர் தொட்டியை அகற்ற கிராம மக்கள் கோரிக்கை!
  8. உலகம்
    கடந்த ஆண்டில் வெளுத்துவிட்ட உலகின் 60% க்கும் மேற்பட்ட பவளப்பாறைகள்
  9. அரசியல்
    சீனாவை எதிர்க்க இந்தியாவுக்கு தைரியம் இருக்கா? படீங்க உங்களுக்கே...
  10. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1,120 கன அடியாக அதிகரிப்பு