Begin typing your search above and press return to search.
அம்பத்தூர்அண்ணா நகர்சேப்பாக்கம்ராதாகிருஷ்ணன் நகர்எழும்பூர்துறைமுகம்கொளத்தூர்மாதவரம்மதுரவாயல்மயிலாப்பூர்பெரம்பூர்இராயபுரம்சைதாப்பேட்டைதியாகராய நகர்திரு. வி. க. நகர்திருவொற்றியூர்ஆயிரம் விளக்குவேளச்சேரிவில்லிவாக்கம்விருகம்பாக்கம்
இருசக்கர வாகனத்தில் சென்றவர் நிலை தடுமாறி விழுந்து பலி
எண்ணூரில், இருசக்கர வாகனத்தில் சென்றவர் நிலை தடுமாறி விழுந்து பலியானார்.
HIGHLIGHTS
வடசென்னையை அடுத்த எண்ணூர் காசிகோயில் குப்பத்தை சேர்ந்தவர் கார்த்திகேயன் (58). எண்ணூரில் உள்ள தனியார் தொழிற்சாலையில் ஒப்பந்த ஊழியராக பணிபுரிந்து வந்த இவர், பணி முடிந்து எண்ணூர் சிவகாமி பகுதியை ஒட்டியுள்ள மேம்பாலத்தி்ல், இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டு இருந்தார்.
அப்போது, திடீரென வாகனத்தில் கோளாறு ஏற்படவே, நிலை தடுமாறி விழுந்து விபத்துக்குள்ளாகி உள்ளார். உடனடியாக அவரை மீட்ட அப்பகுதியில் உள்ள பொது மக்கள், உடனடியாக அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர். உடலை கைப்பற்றிய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.