/* */

எண்ணூரில் 4 கடைகளின் பூட்டை உடைத்து பொருட்களை திருடிய மர்ம நபர்கள்

சென்னை எண்ணூரில், 4 கடைகளின் பூட்டை உடைத்து பொருட்களை திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

HIGHLIGHTS

எண்ணூரில் 4 கடைகளின் பூட்டை உடைத்து பொருட்களை திருடிய மர்ம நபர்கள்
X

சென்னை, திருவொற்றியூரைச் அடுத்த எண்ணூர் பகுதியில், சென்னை மாநகராட்சியால் கட்டி கொடுக்கப்பட்டுள்ள வணிக வளாகத்தில் முப்பதுக்கும் மேற்பட்ட கடைகள் வாடகைக்கு விடப்பட்டுள்ளன. இப்பகுதியில், மர்ம நபர்கள் 4 கடைகளின் பூட்டை உடைத்து, திருடிச் சென்றுள்ளனர்

விமல் என்பவருக்கு சொந்தமான போட்டோ ஸ்டுடியோவின் பூட்டை உடைத்து, 23 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் 90 ஆயிரம் மதிப்புள்ள விலை உயர்ந்த கேமராவை திருடிச் சென்றுள்ளனர் அதன் அருகே உள்ள இளஞ்செழியன் என்பவரின் எல்ஐசி ஏஜென்ட் அலுவலகத்தில், 1800 ரூபாய் பணம் மற்றும் 25 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள லேப்டாப் ஆகியவற்றை திருடி உள்ளனர்

அதேபோல், கூட்டுறவுத்துறை ரேஷன் கடைகளில் இரண்டு கடைகளின் பூட்டை உடைத்து, ஒன்றில் 2000 பணத்தை திருடி சென்றுள்ளனர். மற்றொன்றில், பணம் இல்லாததால் பூட்டை மட்டும் உடைத்துள்ளனர். மேலும் அருகிலுள்ள மளிகை கடை ஒன்றில் பூட்டை உடைத்து திருடுவதற்க்கு முயற்சி செய்துள்ளனர். புகாரின் பேரில், கொள்ளையடித்த மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Updated On: 24 March 2022 12:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  2. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  3. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  4. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  5. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  7. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  8. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?