/* */

மணலி காவல் நிலையம் முன் தீக்குளிக்க முயன்ற பெண்ணால் பரபரப்பு

கந்து வட்டி கொடுமையால் மணலி காவல் நிலையம் முன் தீக்குளிக்க முயன்ற பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது.

HIGHLIGHTS

மணலி காவல் நிலையம் முன் தீக்குளிக்க முயன்ற பெண்ணால் பரபரப்பு
X

மணலி போலீஸ் நிலையம்.( பைல்படம்).

சென்னை மணலி பகுதியை சேர்ந்தவர் தேவி (வயது 50 ).இவரது கணவர் கொத்தனாராக வேலை பார்த்து வருகிறார். தனது கணவருக்கு வேலை இல்லாத காரணத்தால் தேவி பெரிய தோப்பு பகுதியில் உள்ள ராதாகிருஷ்ணன் என்ற நபரிடம் 2 லட்சம் பணம் வாங்கியதாக கூறப்படுகிறது

இந்நிலையில் வட்டி முறையாக கட்டி வந்த நிலையில் திடீரென கட்ட முடியாத சூழ்நிலை எழுந்தவுடன் மொத்த தொகை 8 லட்ச ரூபாய் வந்ததாகவும் அதற்காக மிரட்டி கையெழுத்து ஒன்றை வாங்கிக்கொண்டு வைத்துக் கொண்டதாகவும் இதனைத் தொடர்ந்து மணலி காவல் நிலையத்தில் தேவி புகார் அளித்துள்ளார்.

காவலர்கள் நீதிமன்றத்தில்தான் வழக்கு தொடர வேண்டும் என்று கூறியதைத் தொடர்ந்து மனமுடைந்த அவர் கையில் கொண்டு வந்த பெட்ரோலை உடலில் ஊற்றி தற்கொலைக்கு முயற்சி செய்தார்.

இதனைக் கண்ட காவலர்கள் உடனடியாக தீக்குளிப்பதற்கு முன்னதாக தடுத்து நிறுத்தி அறிவுரை கூறி வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். உடல் முழுவதும் பெட்ரோல் ஊற்றியதால் உடல் முழுவதும் காயங்கள் ஏற்பட்டவுடன் ராயபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக தேவி அனுமதிக்கப்பட்டார். மேலும் இச்சம்பவம் தொடர்பாக மருத்துவமனையில் கொடுத்த தகவலின் அடிப்படையில் மணலி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Updated On: 18 May 2022 3:35 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இனிப்பு பெருஞ்சீரகம் செய்வது எப்படி?
  2. லைஃப்ஸ்டைல்
    அப்பா ஒரு ஆழ்கடல்..! கன்னட மொழியில் அப்பா மேற்கோள்..!
  3. லைஃப்ஸ்டைல்
    காதலை ஆரத்தழுவி காலைப்பொழுதுக்கு ஒரு வணக்கம்..!
  4. திருப்பூர்
    போதைப் பொருள்களை ஒழிக்க மக்களின் போராட்டமே தீா்வு; இந்து முன்னணி...
  5. திருப்பூர்
    வெள்ளக்கோவில் நகராட்சி; ஒரே நாளில் ரூ.1 கோடி வரி வசூல் செய்து சாதனை
  6. லைஃப்ஸ்டைல்
    கொரோனா ஒன்றே போதும் செவிலியர் புகழ் பாட..!
  7. லைஃப்ஸ்டைல்
    6th wedding anniversary quotes- 6 வருட திருமண வாழ்க்கையின் வெற்றிக்கான...
  8. தூத்துக்குடி
    விரைவில் தூத்துக்குடி பாலக்காடு விரைவு ரயில் சேவை!
  9. அரசியல்
    மோடி என்ன தான் சொன்னார்..? தெளிவாக புரிந்து கொள்ளுங்கள்..!
  10. குமாரபாளையம்
    ராமர், சீதா திருக்கல்யாண வைபோகம்