/* */

திருவொற்றியூர் குடியிருப்போர் நல சங்கத்தில் 22 லட்சம் முறைகேடு

முறைகேடு தொடர்பாக போலீஸார் வழக்குப்பதிவு விசாரணை நடத்திட நீதிமன்றம் உத்தரவிட் டுள்ளது

HIGHLIGHTS

திருவொற்றியூர் குடியிருப்போர் நல சங்கத்தில் 22 லட்சம் முறைகேடு
X

பைல் படம்

திருவொற்றியூர் குடியிருப்போர் நல சங்கத்தில் ரூ. 22 லட்சம் முறைகேடு தொடர்பாக வழக்கு பதிவு விசாரணை நடத்திட நீதிமன்றம் உத்தரவு

சென்னை திருவொற்றியூரில் குடியிருப்போர் நல சங்கத்தில் ரூ. 22 லட்சம் முறைகேடு நடைபெற்றுள்ளதாகக் கூறப்பட்ட புகாரில் உடனடியாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்திட திருவொற்றியூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

திருவொற்றியூர் அஜாக்ஸ் பேருந்து நிலையம் எதிரே ஹன்சா கோர்ட் யார்டு அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளன. இங்கு 265 வீடுகள் அமைந்துள்ளன. இங்கு குடியிருப்போர் நல சங்கம் அமைக்கப்பட்டு ஒவ்வொரு வீட்டின் உரிமையாள ரிடமிருந்தும் மாதந்தோறும் பராமரிப்பு பணிகளுக்காக சந்தா செலுத்துகின்றனர்.

இந்நிலையில் கட்டடங்களை புதுப்பித்து வர்ணம் பூசுதல், பாதாள சாக்கடை இணைப்பு, குடிநீர் உள்ளிட்டவைகளுக்காக ஒவ்வொரு வீட்டு உரிமையாளரிடமிருந்தும் தலா ரூ.55 ஆயிரம் ரூ. 1.30 கோடி சில ஆண்டுகளுக்கு முன்பு வசூலிக்கப்பட்டதாகவும், இதில் ரூ. 22 லட்சம் நிதியை நல சங்க நிர்வாகிகளாக செயல்பட்டு வந்த இளங்கோ, கருப்பையா, மகேஸ் ஆகிய மூன்று பேர் முறைகேடு செய்துவிட்டனர். இவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி திருவொற்றியூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் குடியிருப்போர் நல சங்க உறுப்பினர்கள் எஸ்.சுகுமார், எம்.டி.சேகர் ஆகியோர் வழக்குத் தொடர்ந்தனர்.

இது குறித்து விசாரணை நடத்திய குற்றவியல் நடுவர் நீதிமன்ற மாஜிஸ்திரேட் சரவணக்குமார் வழக்கில் முறைகேடு நடைபெற்றிருப்பதற்கான முகாந்திரம் இருப்பதால், இது குறித்து உடனடியாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என திருவொற்றியூர் காவல் நிலைய போலீஸாருக்கு புதன்கிழமை உத்தரவிட்டார். இதனையடுத்து திருவொற்றியூர் காவல் நிலைய போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 3 Jun 2023 1:30 PM GMT

Related News

Latest News

  1. கல்வி
    +2 க்கு பிறகு அடுத்தது என்ன? சாதித்து காட்டுவோம்!
  2. லைஃப்ஸ்டைல்
    அதிராமல் அதிரும் மின்னூட்டம், காதல்..!
  3. வீடியோ
    வள்ளுவனை உலக முழுவதும் எடுத்து சென்ற தலைவன் மோடி !! #modi #thirukkural...
  4. வீடியோ
    திருக்குறளை 100 மொழிகளில் மொழியாக்கம் செய்யும் Modi !#thirukural...
  5. வீடியோ
    Delhi-யில் இனிமே நம்ம தான் Annamalai Mass || #annamalai #delhi...
  6. வீடியோ
    ஊழலில் மிதக்கும் ஆம்ஆத்மிகிழித்து தொங்கவிட்ட...
  7. திருப்பூர்
    திருப்பூரில் புற்றுநோய் விழிப்புணா்வு சைக்கிள் பேரணி
  8. வீடியோ
    Modi-யை எதிர்க்க Aam Aadmi செய்த கீழ்த்தரமான செயல் !#annamalai...
  9. லைஃப்ஸ்டைல்
    மலர்கள், செடிகளின் வண்ணத்துப்பூச்சிகள்..!
  10. பல்லடம்
    பல்லடம் பொங்காளியம்மன் கோவில் திருப்பணி; அமைச்சா் சேகா்பாபு நேரில்...