பெற்ற மகளையே பாலியல் பலாத்காரம் செய்த தந்தை போக்சோ சட்டத்தில் கைது

போக்சோ சட்டத்தில் கைதான ஜெயக்குமார்.
சென்னை திருவொற்றியூரில் வசிப்பவர் முனியாண்டி என்ற ஜெயக்குமார் (வயது 39). இவர் தனது மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக மனைவியை பிரிந்து தனியாக வசித்து வருகின்றார். இவருடன் 9 வயது பெண் குழந்தையும் வசித்து வருகிறது.
இந்நிலையில் சிறுமியின் அத்தை திருமண நிகழ்வுக்காக வெளியூருக்கு சென்றிருந்த நேரத்தில் ஜெயக்குமார் தன் மகள் என்று கூட பார்க்காமல் சிறுமியை பாலியல் தொந்தரவு கொடுத்து வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் உடல்நிலை சரியில்லாமல் பள்ளிக்கூடத்திற்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்த சிறுமியை வளர்ப்பு தந்தை ஓம்குமார் உடல் நலம் குறித்து விசாரித்துள்ளார். பின்னர் சிறுமியின் தாத்தா மற்றும் ஓம்குமார் ஆகியோர் சிறுமியை அழைத்துக் கொண்டு குழந்தைகள் நல மருத்துவரிடம் காண்பித்த பொழுது அங்கு தனக்கு நடந்த கொடுமைகளை கூறி அழுதுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக ஓம்குமார் திருவொற்றியூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் காவல்துறையினர் முனியாண்டி என்ற ஜெயக்குமாரை கைது செய்து போக்சோ சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்தனர்
தந்தையே தனது மகளை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் திருவொற்றியூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu