/* */

சாத்தாங்காடு பகுதிகளில் வீடுகளை குறிவைத்து திருடிய 4 பேர் கைது

சாத்தாங்காடு பகுதிகளில் வீடுகளை குறிவைத்து திருடிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

சாத்தாங்காடு பகுதிகளில்  வீடுகளை குறிவைத்து திருடிய 4 பேர் கைது
X

கைது செய்யப்பட்ட நான்கு பேர்.

சென்னை திருவொற்றியூர் சாத்தாங்காடு ஜோதி நகர் பகுதியில் வசித்து வருபவர் பால்பாண்டி. இவர் தனது குடும்பத்துடன் வீட்டை பூட்டிவிட்டு வெளியில் சென்றிருந்த நிலையில் அதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த 5 சவரன் தங்க நகைகளை திருடிச் சென்றனர்.

மேலும் அதே மர்ம நபர்கள் அருகிலுள்ள ஒரு வீடு மற்றும் ஒரு தங்க கடையை கொள்ளையடிக்க முயற்சி செய்துள்ளனர். ஆனால் கொள்ளையடிக்க முடியாமல் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

இதனைத்தொடர்ந்து சாத்தாங்காடு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், அப்பகுதிகளில் உள்ள சிசிடிவி கேமராக்களை வைத்து தனிப்படை அமைத்து தேடி வந்தனர். இந்நிலையில் பெரும்பாக்கம் பகுதியைச் சேர்ந்த கோகுல்ராஜ் (19), கோபி(25), மகபூப்பாஷா(23), விக்னேஷ் (22) ஆகிய நான்கு பேரை சுற்றி வளைத்து கைது செய்து அவரிடமிருந்து 2. 1/2 சவரன் தங்க நகைகளை பறிமுதல் செய்தனர். பின்னர் நான்கு பேரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Updated On: 20 March 2022 3:15 AM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    சென்னையில் பிரமாண்டமான தாஜ் வீடுகள் விலை தெரியுமா...?
  2. உசிலம்பட்டி
    கனமழை..! சதுரகிரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை..!
  3. கல்வி
    அரசின் சான்றிதழ் பெற என்னென்ன ஆவணங்கள் வேணும்..? பள்ளி...
  4. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே கோடைகால கபாடி பயிற்சி..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பின் அணையா விளக்கு, அம்மா..! அன்னையர் தின வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!
  7. லைஃப்ஸ்டைல்
    வயசே தெரியாம பிறந்தநாள் கொண்டாடும் நண்பா..வாழ்த்துகள்..!
  8. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  9. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  10. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...