/* */

சென்னையில் சிறுமியை காதலிப்பதாக கூறி பலாத்காரம் செய்த வாலிபர் கைது

சென்னையில் சிறுமியை காதலிப்பதாக கூறி பலாத்காரம் செய்த வாலிபரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

HIGHLIGHTS

சென்னையில் சிறுமியை காதலிப்பதாக கூறி பலாத்காரம் செய்த வாலிபர் கைது
X

சென்னை திருவொற்றியூர் புதுவண்ணாரப்பேட்டை பூண்டி தங்கம்மாள் தெருவை சேர்ந்தவர் ராமதாஸ் மகன் பிரவீன்(23). பிஸ்கட் வியாபாரியான இவர் திருவொற்றியூரில் உள்ள மளிகை கடைக்கு பிஸ்கட் பாக்கெட் கொடுத்து வந்துள்ளார். அப்போது அங்குள்ள 17 வயது சிறுமியிடம் அவருக்கு பழக்கம் ஏற்பட்டது. பின்னர் அந்த சிறுமியை காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறியுள்ளார். இதனை நம்பிய அந்த சிறுமி பிரவீனுடன் பழகி வந்தார். இதற்கிடையே கடந்த சில நாட்களுக்கு முன் பிரவீன் சிறுமியை தன்னுடைய வீட்டிற்கு அழைத்து சென்று பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் சிறுமியின் நடத்தையில் சந்தேகமடைந்த அவரது பெற்றோர் விசாரிக்கும்போது அவர் பிரவீன் தன்னை பலாத்காரம் செய்ததாக தெரிவித்தார். இதனால் அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர் இதுகுறித்து திருவொற்றியூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசில் புகார் தெரிவித்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரவீனை போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Updated On: 5 March 2022 3:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே வலி நிவாரணி எண்ணெய் தயாரிப்பது எப்படி?
  2. லைஃப்ஸ்டைல்
    வெறும் வயிற்றில் கற்றாழை சாறு அருந்துவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி...
  3. ஆன்மீகம்
    பழனியில் வரும் ஆகஸ்ட் மாதத்தில், உலக முருக பக்தர்கள் மாநாடு
  4. லைஃப்ஸ்டைல்
    பெண்களுக்கு 7 மணி நேர தூக்கம் போதுமா..? ஆய்வு என்ன சொல்லுது?
  5. லைஃப்ஸ்டைல்
    இரவில் சாப்பிடுவதால் உடல் பருமனை அதிகரிக்கும் 5 உணவுகள் என்னென்ன...
  6. லைஃப்ஸ்டைல்
    சுவையான வத்தக்குழம்பு செய்வது எப்படி?
  7. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் தேனின் மருத்துவ குணங்களை தெரிஞ்சுக்குங்க!
  8. தென்காசி
    10ம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ,மாணவிகளுக்கு பாராட்டு...
  9. சுற்றுலா
    அண்டார்டிகாவில் ஒழுங்குபடுத்தப்பட்ட சுற்றுலா: சுற்றுச்சூழலை காப்பாற்ற...
  10. லைஃப்ஸ்டைல்
    பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்வது ஆபத்து! ஹார்வர்ட் பல்கலைகழக ஆய்வு