/* */

திருவேற்காடுஅம்மன்கோயிலில் பௌர்ணமி நிறைமணி சிறப்பு பூஜை

புரட்டாசி பௌர்ணமியையொட்டி, திருவேற்காடு கருமாரியம்மன் கோயிலில் நிறைமணி பூஜை விழா

HIGHLIGHTS

சென்னை திருவேற்காடு கருமாரியம்மன் கோவிலில் புரட்டாசி பவுர்ணமியையொட்டி பழங்கள் காய்கறிகளுடன் நிறைமணி விழா பூஜைகள் துவங்கின. சென்னையில் கோயில் நகரமான திருவேற்காடில் புகழ் பெற்ற தேவி கருமாரியம்மன் கோயிலில், புரட்டாசி பௌர்ணமியை முன்னிட்டு நிறைமணி விழா பூஜைகள் நடைபெறுகிறது.

அதில், கோயிலின் கருவறை மற்றும் முன் பகுதியில் சுமார் 5 டன் அளவுக்கு காய்கறி, தானியம், பழம், மூலிகை தாவரங்கள், எண்ணெய், இனிப்பு, குளிர்பானம் போன்ற பொருட்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. மனிதன் உட்பட அனைத்து ஜீவராசிகளும் பசியின்றி வாழ வேண்டும். மழை, விவசாயம், இயற்கை வளம் செழிக்க வேண்டும் என்பதற்காக, இந்த நிறைமணி பூஜை ஆண்டு தோறும், புரட்டாசி பவுர்ணமியில் நடத்தப்படுகிறது.மூன்றாவது நாள், அங்குள்ள காய்கனி உள்ளிட்ட பொருட்களால் உணவு சமைத்து, அம்மனுக்கு படைத்து, பக்தர்களுக்கும் அன்னதானம் வழங்கப்படும். மேலும் பழம் மற்றும் இனிப்புகள் பிரசாதமாகவும் வழங்கப்படும். சென்னை சுற்றுவட்டாரப்பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் நிறைமணி விழா பூஜையில் கலந்து கொள்ள, கோவிலுக்கு வந்து செல்கின்றனர்.

Updated On: 23 Sep 2021 5:59 AM GMT

Related News

Latest News

  1. வழிகாட்டி
    ஒரு வரலாற்று கலாசாரம் முடிவுக்கு வருகிறது..!
  2. சினிமா
    ஒரு கோடி ரூபாய் ராயல்டி பெற்றாரா மணிரத்தினம்..?
  3. தேனி
    வீரபாண்டி கௌமாரியம்மன் திருவிழா இன்று தொடங்கியது..!
  4. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  5. இந்தியா
    சென்னையில் தரையிறங்கிய 8 பெங்களூர் விமானங்கள்
  6. வீடியோ
    🔴LIVE : தனது சொந்த ஊரில் ஜனநாயக கடமையை ஆற்றிய பிரதமர் மோடி ||...
  7. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  8. ஈரோடு
    கொதித்த ஈரோட்டை குளிர்வித்த மழை: மாவட்டம் முழுவதும் 72.80 மி.மீ பதிவு
  9. சேலம்
    மேட்டூர் அணையில் இருந்து நீர் திறப்பு 1,500 கன அடியாக அதிகரிப்பு
  10. ஈரோடு
    பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 44 அடியாக சரிவு