காவல் அதிகாரிகளின் முதியோரை பேணுவோம் : விழிப்புணர்வு சைக்கிள் பேரணி

காவல் அதிகாரிகளின் முதியோரை பேணுவோம் : விழிப்புணர்வு சைக்கிள் பேரணி
X

'முதியோரை பேணுவோம்' அடையாறு போலீசாரின் சைக்கிள் விழிப்புணர்வு பேரணி

சென்னை அடையாறில் போலீசாரின் சார்பாக முதியோரை பேணுவோம் என்கிற சைக்கிள் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால் உத்தரவின்பேரில் முதியோர் நலன் கருதி பல்வேறு உதவிகள் செய்யப்பட்டு வருகிறது.

இதன் தொடர்ச்சியாக அடையாறு காவல் மாவட்ட காவல் அதிகாரிகள் மற்றும் காவலாளர்கள் கலந்துகொண்ட முதியோரை பேணுவோம் விழிப்புணர்வு சைக்கிள் பேரணியை அடையார் சரக உதவி ஆணையாளர் நெல்சன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

சைக்கிள் பேரணி எலியட்ஸ் கடற்கரையில் தொடங்கி பேசன் நகர் அவென்யூ எல் பி ரோடு இந்திரா நகர் கஸ்தூரிபாய் நகர் வழியாக சென்று காந்திநகரில் சைக்கிள் பேரணி முடிவுற்றது. இதில் ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.

Tags

Next Story
ai in future agriculture