அனைத்து கட்சி கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியை பொருட்படுத்துவதில்லை: சீமான்

அனைத்து கட்சி கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியை பொருட்படுத்துவதில்லை: சீமான்

 நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் 

நகர்ப்புற உள்ளாட்சித்தேர்தலில் 65 விழுக்காடு இடங்களில் நாம் தமிழர் கட்சி போட்டியிடுகிறது என்றார் சீமான்

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் நெருக்கடியின் காரணமாக 65 சதவீத இடங்களில் மட்டுமே நாம் தமிழர் கட்சி போட்டியிடுகிறது. அனைத்து கட்சி கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியை பொருட்படுத்துவதில்லை என்றார் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்.

சென்னை சேப்பாக்கத்தில் உள்ள பத்திரிகையாளர் மன்றத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக நடைபெற்ற செய்தியாளர்களை சந்திப்பில் மேலும் கூறியதாவது:தமிழக மக்கள் லஞ்சம் ஊழலற்ற புதிய ஆட்சிநல்லாட்சி வேண்டும் என மக்கள் விரும்புகிறார்கள். 50 ஆண்டு காலமாக மாற்றி மாற்றி ஆட்சி செய்தாலும் வெள்ளம் தொடர்பான பிரச்னைக்கான தீர்வு இதுவரை காண முடியவில்லை. பல்வேறு இடங்களில் தேங்கி கிடக்கும் குப்பைகளை அகற்ற முடியாமல் தூய்மை இந்தியா என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.

துணிப்பை பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டுமென்றால் மஞ்சப்பை கொண்டுவந்தால் போதுமா பச்ச பை கொண்டு வரக் கூடாதா , இதற்கு முதல் பாலித்தீன், பிளாஸ்டிக் உற்பத்தியை தடை செய்ய வேண்டும் இதை செய்தாலே போதும் துணிப்பை அனைவரும் பயன்படுத்துவர்கள்.மேலும் நல்லாட்சி என தெரிவிக்கிறார்கள். நல்லாட்சி என்பது சட்ட விதிகளை மதிப்பது என்பதுதான் அதை நீங்கள் மதிக்கிறீர்கால என் தம்பிகளை மூன்று நாட்களுக்கு மேல் கடத்தி வைத்து மிரட்டி உள்ளீர்கள்.ஆட்சியில் இருக்கிறீர்கள் பெரிய கட்சி இதெல்லாம் செய்கிறீர்களே இதை நல்லாட்சி என தெரிவிக்கிறார்கள் என்று ஆவசமாக கேள்வி எழுப்பினார்.

அதேபோல் ஆட்சிக்கு வந்து 8 மாதங்களில் 8 ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் செய்து வெளிநாட்டில் முதலீடு செய்துள்ளனர். இதற்கு நான் ஆதாரத்துடன் நிரூபிப்பேன். விஜய் மக்கள் இயக்கம் நாம் தமிழர் கட்சிக்கு போட்டியா என்ற கேள்விக்கு ,விஜய் என் தம்பி. அவருடைய கோட்பாடு வேறு, என்னுடைய கோட்பாடு வேறு. இதனை போட்டி என்று கூற முடியாது.. அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியை பொருட்படுத்துவது இல்லை .

மேலும் காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தை போல் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தை கைவிட வேண்டும் என்று கூறுவதற்கு கர்நாடக முதலமைச்சருக்கு உரிமை இல்லை. இது அத்துமீறலான செயல். சீமானுக்கு 1,800 கோடி சொத்து உள்ளது என்று கூறுபவர்கள் அது எங்கிருந்து வந்தது என்றும் கூற வேண்டும்..அப்படி இருந்தால் என்னுடைய வீட்டிலும் சோதனை செய்து பிஜேபி பணத்தை எடுத்துச் செல்லட்டும்.

தலித்- இஸ்லாமிய கூட்டமைப்பு வைத்த திருமாவளவன் இஸ்லாமியர் சிறையில் உள்ளதை குறித்து எந்த ஒரு கருத்தையும் தெரிவிக்கவில்லை. அதேபோல் தேர்தலின்போது சிதம்பரத்தில் மட்டும் திருமாவளவனுக்கு பேச அனுமதி மற்ற இடங்களில் பேச வாய்ப்பளிக்கவில்லை. கோவையில் தேர்தலுக்கான சுவரொட்டியில் அனைத்து கட்சி தலைவர்களும் புகைப்படங் களும் இடம்பெற்ற நிலையில் திருமாவளவன் உருவப்படம் மட்டும் இடம்பெறாதது ஏன்..

65 விழுக்காடு உள்ளாட்சித் தேர்தலில் நாம் தமிழர் கட்சி போட்டியிடுகிறது. வருகின்ற 22 ஆம் தேதி எங்களது வெற்றி வாய்ப்பு நீங்கள் அறிவீர்கள். மேலும் கொரோனா சூழல் காரணமாக வாக்கு சேகரிக்க இயலவில்லை, ஊடகத்தின் வாயிலாக நாங்கள் உங்களிடம் கேட்டுக் கொள்கிறோம், எங்களின் எளிய பிள்ளைகளை தான் தேர்தலில் நிறுத்தி உள்ளோம் .சிறந்த நிர்வாகத்தை எங்களின் பிள்ளைகள் வழங்குவார்கள். அனைவரும் விவசாயி சின்னதிற்கு வாக்களிக்க கேட்டுக் கொள்கிறேன் என்றார் சீமான்.


Tags

Next Story