Begin typing your search above and press return to search.
அம்பத்தூர்அண்ணா நகர்சேப்பாக்கம்ராதாகிருஷ்ணன் நகர்எழும்பூர்துறைமுகம்கொளத்தூர்மாதவரம்மதுரவாயல்மயிலாப்பூர்பெரம்பூர்இராயபுரம்சைதாப்பேட்டைதியாகராய நகர்திரு. வி. க. நகர்திருவொற்றியூர்ஆயிரம் விளக்குவேளச்சேரிவில்லிவாக்கம்விருகம்பாக்கம்
காவல்துறை தலைவர்களுக்கு உச்சநீதிமன்றம் எச்சரிக்கை..!
சமூக வலைதளங்களில் மருத்துவ உதவி கேற்கும் நபர்கள் மீது அவதூறு பரப்புவதாக கூறி வழக்குப்பதிவு செய்யக்கூடாது என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கொரோனா தடுப்பூசி குறித்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரிக்கப்பட்டது. விசாரணையில் சமூக வலைத்தளங்களில் மருத்துவ உதவி கேட்கும் பொதுமக்கள் மீது அவதூறு பரப்புவதாகக் கூறி வழக்குப்பதிவு செய்யக் கூடாது என்று அனைத்து மாநில காவல்துறை தலைவர்களுக்கும் நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர். இதை மீறினால் காவல்துறை அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பாயும் என்றும் நீதிபதிகள் எச்சரித்துள்ளனர்.
மேலும் தடுப்பூசிக்கான விலையை நிறுவனங்கள் முடிவு செய்ய அனுமதிக்கக் கூடாது. தடுப்பூசி விலையை மத்திய அரசே நிர்ணயிக்க வேண்டும் என்று நீதிபதிகள் அறிவுறுத்தினர்.