/* */

ஸ்டெர்லைட் ஆலை திறப்பு : ஜூலை 31 வரை மட்டுமே அனுமதி - உச்சநீதிமன்றம்

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் வரும் ஜூலை 31 வரை மட்டுமே ஆக்சிஜன் உற்பத்திக்கு அனுமதி வழங்கப்படும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

HIGHLIGHTS

ஸ்டெர்லைட் ஆலை திறப்பு : ஜூலை 31 வரை மட்டுமே அனுமதி - உச்சநீதிமன்றம்
X

கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வரும் சூழ்நிலையில், பல மாநிலங்களில் ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அந்தவகையில், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி தொடர்பாக சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் பழனிசாமி தலைமையில் நடைபெற்ற அனைத்து கட்சி கூட்டத்தில், ஸ்டெர்லைட் ஆலையை ஆக்சிஜன் உற்பத்திக்காக மட்டுமே திறக்க அனுமதிக்கலாம் என ஒருமனதாக முடிவெடுத்து, 5 தீர்மானங்களுக்கு ஒப்புதல் அளித்து நிறைவேற்றப்பட்டது.

இந்நிலையில், ஆக்சிஜன் உற்பத்திக்காக ஸ்டெர்லைட் ஆலையில் ஜூலை 31 வரை மட்டுமே ஆக்சிஜன் உற்பத்திக்கு அனுமதி வழங்கப்படும் என்று உச்சநீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்துள்ளது. மேலும், நிலைமையை பொறுத்து ஸ்டெர்லைட் ஆலை ஆக்சிஜன் உற்பத்திக்காக மீண்டும் இயக்க வேண்டுமா? என்பது குறித்து பிறகு முடிவெடுக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி, ஆக்சிஜன் உற்பத்தியை கண்காணிக்க 5 நிபுணர்கள் கொண்ட குழுவை உச்சநீதிமன்றம் அமைத்துள்ள நிலையில், அந்த ஐந்து நிபுணர்களை தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆய்வு தேர்வு செய்யும் என்று கூறப்பட்டது. அந்த குழுவில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர், துணை ஆட்சியர், மாவட்ட காவல் கண்காளிப்பாளர் உள்ளிட்ட அதிகாரிகள் இடம் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Updated On: 28 April 2021 8:45 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  2. போளூர்
    ஜவ்வாது மலையில் பலாப்பழம் விளைச்சல் அமோகம்: விவசாயிகள் மகிழ்ச்சி!
  3. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  4. திருவண்ணாமலை
    எஸ் கே பி கல்வி குழுமத்தின் மாபெரும் ஓவியம், நடனம், திருக்குறள்,...
  5. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் தேவையற்ற புதைவட கேபிள்களை அகற்ற மனு
  6. குமாரபாளையம்
    பள்ளிபாளையத்தில் கனமழை: பிரதான சாலைகளில் சாய்ந்த இரு மரங்கள்
  7. லைஃப்ஸ்டைல்
    இல்லற வாழ்வில் நல்லறம் கண்ட தம்பதிக்கு வாழ்த்துகள்..!
  8. மேட்டுப்பாளையம்
    கோவில்பாளையம் பகுதியில் 2 கிலோ கஞ்சா சாக்லேட் பறிமுதல்..!
  9. தொழில்நுட்பம்
    சந்திரனில் முதல் ரயில் பாதை அமைக்க நாசா திட்டம்
  10. லைஃப்ஸ்டைல்
    கரம் கொடுத்த நீ, பிரியாத வரம் ஒன்று தாராய்..!