/* */

வாக்கு எண்ணிக்கைக்கு வரும் முகவர்களுக்கு கொரோனா கட்டுப்பாடுகள்

வாக்கு எண்ணிக்கைக்கு வரும் முகவர்களுக்கு கொரோனா கட்டுப்பாடுகள் குறித்து மாநில தேர்தல் ஆணையர் அறிவிப்பு

HIGHLIGHTS

வாக்கு எண்ணிக்கைக்கு வரும்  முகவர்களுக்கு கொரோனா கட்டுப்பாடுகள்
X

வாக்கு எண்ணிக்கைக்கு வரும் வேட்பாளர்களின் முகவர்களுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம் என்று தமிழக தலைமை தேர்தல் ஆணையர் சத்யபிரத சாகு உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து பேசிய அவர், கொரோனா இரண்டாவது அலை நோய் தொற்றின் பாதிப்பு அதிகமாக இருக்கக்கூடிய சூழ்நிலையில் தமிழகத்தில் வரும் மே 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற இருக்கிறது. இந்த வாக்கு எண்ணிக்கைக்கு பல்வேறு ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் செய்திருக்கிறது. அதன்படி 14 மேஜைகள் வைத்து இந்த வாக்கு எண்ணிக்கையானது நடைபெறும். ஒவ்வொரு தொகுதிக்கும் ஏற்ப இந்த மேஜைகளின் எண்ணிக்கை அதிகரிக்கும். ஒவ்வொரு மேஜைக்கும் ஒரு சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டு வாக்கு எண்ணிக்கையானது பதிவு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வாக்கு எண்ணக்கூடிய அறைகளிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படும்.

வாக்கு எண்ணிக்கைக்கு வரும் முகவர்கள்கொரோனா தடுப்பூசி போட்டிருக்க வேண்டும் அல்லது 72 மணி நேரத்திற்குள் RTPCR பரிசோதனை எடுத்ததற்கான சான்றிதழ் வைத்திருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் பணியில் ஈடுபடக்கூடிய பணியாளர்களுக்கும் இதே நிலை தான் நீடிக்கும் என்று கூறப்பட்டுள்ளது. காலை 8 மணி முதல் தபால் வாக்கு என்னும் பணி தொடங்கப்படும். அதன் தொடர்ச்சியாக EVMல் பதிவாகியுள்ள வாக்கு எண்ணிக்கையும் நடைபெற உள்ளது என்று தமிழக தலைமை தேர்தல் ஆணையர் சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார்.

Updated On: 1 May 2021 4:19 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    பணமோசடி வழக்கில் ஜார்க்கண்ட் அமைச்சர் ஆலம்கீர் ஆலம் கைது
  2. லைஃப்ஸ்டைல்
    என்னுயிரில் வாழ்பவளுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  3. உலகம்
    ஸ்லோவாக்கியாவின் பிரதமர் மீது பலமுறை சுடப்பட்டதையடுத்து, உடல்நிலை...
  4. உலகம்
    மாற்றியமைக்கப்பட்ட பன்றி சிறுநீரக மாற்று சிகிச்சையைப் பெற்றவர் மரணம்
  5. லைஃப்ஸ்டைல்
    கஸ்தூரி மஞ்சளின் கொட்டிக் கிடக்கும் நன்மைகள் பற்றித் தெரியுமா?
  6. லைஃப்ஸ்டைல்
    கொடூர வலி தரும் சிறுநீரக கற்கள் வராமல் தடுப்பது எப்படி?
  7. உலகம்
    பணிநீக்கம் செய்யப்பட்ட அமெரிக்க H-1B விசா வைத்திருப்பவர்களுக்கான புதிய...
  8. லைஃப்ஸ்டைல்
    பிறை காணும் பெருநாளுக்கு வாழ்த்துச் சொல்வோமா..?
  9. வணிகம்
    இந்திய மசாலாப் பொருட்களின் மீது உணவுப் பாதுகாப்பு அமைப்பின் புதிய...
  10. குமாரபாளையம்
    நகராட்சி பகுதிகளில் மாவட்ட கலெக்டர் ஆய்வு..!