/* */

சென்னை டாஸ்மாக் கடைகளில் விற்பனை கண்காணிப்பு: தேர்தல் அதிகாரி பேட்டி

சென்னை டாஸ்மாக் கடைகளில் விற்பனை கண்காணிப்பு: தேர்தல் அதிகாரி பேட்டி
X

சென்னையில் அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் விற்பனை கண்காணிக்கப்பட்டு வருகிறது. தற்போது எவ்வளவு விற்பனை நடக்கிறது என்பது குறித்தும் தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறது என்று மாவட்ட தேர்தல் அதிகாரி, ஆணையர் பிரகாஷ் கூறினார்.

சென்னை மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கு, வேட்பாளர்களின் தேர்தல் செலவினம் மற்றும் மாதுபான விற்பனை கண்காணிப்பு தொடர்பான ஆலோசனை கூட்டம் சென்னை மாநகராட்சியில் நடைபெற்றது. பின்னர் ஆணையர் பிரகாஷ் நிருபர்களிடம் கூறியதாவது: உரிய ஆவணங்களின்றி எடுத்து செல்லப்படும் பணம், பொருட்களை தீவிரமாக கண்காணிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. சாதாரண நேரங்களில் டாஸ்மாக் கடைகளில் எவ்வளவு விற்பனை நடக்கிறது, இப்போது எவ்வளவு விற்பனை நடக்கிறது என்பது குறித்தும் தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறது.

இதுவரை 16 சட்டமன்ற தொகுதிகளிலும் 1000 லிட்டர் மதுபானங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சென்னை மாநகர காவல் துறை சார்பில் 2 ஆயிரம் லிட்டர் மதுபானம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்று கூறினார்.

Updated On: 30 March 2021 9:38 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    பெண்மையை போற்றும் பெருவிழாவும் மகளிர் தின வாழ்த்துக்களும்
  2. லைஃப்ஸ்டைல்
    ரமலான் வாழ்த்துக்கள்: தமிழில் நம்பிக்கையின் ஒளி
  3. ஆன்மீகம்
    50 கிறிஸ்துமஸ் வாழ்த்துகள் தமிழில்
  4. ஆன்மீகம்
    விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்
  5. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 203 கன அடி
  6. வணிகம்
    எவரெஸ்ட், MDH மசாலாப் பொருட்களை நேபாளத்தில் விற்பனை செய்ய தடை
  7. நாமக்கல்
    கொல்லிமலையில் ஜவகர் சிறுவர் மன்ற கோடைகால கலை பயிற்சி
  8. தேனி
    நீர் நிலை அருகில் செல்ல வேண்டாம்: தேனி கலெக்டர் எச்சரிக்கை
  9. தென்காசி
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  10. லைஃப்ஸ்டைல்
    வேலைத்தள உத்வேகத்தை உயர்த்தும் 7 உத்திகள்