/* */

ஆட்சி அமைக்க உரிமைக்கோரி ஆளுநரை சந்தித்தார் மு.க ஸ்டாலின்

தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்க தமிழக ஆளுநர் பன்வாரி லால் புரோஹித்திடம் ஸ்டாலின் கடிதம் வழங்கி ஆட்சி அமைக்க உரிமை கோரியுள்ளார்

HIGHLIGHTS

ஆட்சி அமைக்க உரிமைக்கோரி ஆளுநரை சந்தித்தார்   மு.க ஸ்டாலின்
X

தமிழ்நாட்டில் புதியதாக ஆட்சி அமைய பெரும்பான்மை பலம் பெற்றுள்ள திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், அதற்குரிய கடிதத்தை தமிழக ஆளுநர் பன்வாரி லால் புரோஹித்திடம் வழங்கி ஆட்சி அமைக்க உரிமை கோரியுள்ளார்.

சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகைக்கு இன்று காலை 10.30 மணியளவில் வந்த மு.க. ஸ்டாலின் ஆளுநரை சந்தித்தார். அப்போது தேர்தலில் திமுக கூட்டணிக்கு கிடைத்த வெற்றிக்காக வாழ்த்து தெரிவித்த ஆளுநர் பன்வாரி லால் புரோஹித், வரும் 7ஆம் தேதி புதிய முதல்வராக பதவியேற்கவுள்ள ஸ்டாலின் மற்றும் அவரது அமைச்சரவைக்கான நிகழ்ச்சி குறித்தும் ஆலோசனை நடத்தியுள்ளார். இந்த சந்திப்பின்போது திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், முதன்மை செயலாளர் கே.என். நேரு, பொருளாளர் டி.ஆர். பாலு, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி உள்ளிட்டமுக்கிய நிர்வாகிகள் உடன் இருந்தனர்

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி, திமுக சட்டமன்ற குழுவின் தலைவராக ஸ்டாலினை தேர்வு செய்து நிறைவேற்றப்பட்ட கடிதத்தை ஆளுநரிடம் வழங்கியதும், இன்று மாலைக்குள் ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்கும் கடிதத்தை அளிப்பதாக தங்களிடம் ஆளுநர் தெரிவித்தார் என்று கூறினார்.

Updated On: 5 May 2021 6:15 AM GMT

Related News

Latest News

  1. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  2. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  3. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?
  4. விளையாட்டு
    மும்பை இந்தியன்ஸ் ஆட்டம் குறித்து ரோஹித் ஷர்மாவின் முதல் எதிர்வினை
  5. சோழவந்தான்
    சோழவந்தான் திரௌபதி அம்மன் கோவிலில் கீசகன் வதம்
  6. லைஃப்ஸ்டைல்
    அரிதாய் கிடைத்த மனித பிறப்பை மகிழ்ந்து கொண்டாடுவோம் வாங்க..!
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டின் தூண்களாய், உலகின் ஒளியாய் விளங்கும் மகளிர் தினச் சிறப்பு...
  8. காஞ்சிபுரம்
    தொடங்கியது வரதராஜ பெருமாள் திருக்கோயில் பிரம்மோற்சவம்
  9. லைஃப்ஸ்டைல்
    சிரிப்பும் சந்தோஷமும் நிறைந்த தமிழ் திருமண வாழ்த்துகள்!
  10. காஞ்சிபுரம்
    ஆதிசங்கரரின் உபதேசங்களை மொழிபெயர்க்க வேண்டும்..!