/* */

ஆந்திராவிலிருந்து ஹெலிகாப்டரில் மருந்து உபகரணங்கள் சென்னை வந்தன!

ஆந்திர மாநிலத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் மருத்துவ உபகரணங்கள் சென்னைக்கு வந்திறங்கின.

HIGHLIGHTS

ஆந்திராவிலிருந்து ஹெலிகாப்டரில் மருந்து உபகரணங்கள் சென்னை வந்தன!
X

ஆத்திராவில் இருந்து ஹெலிகாப்டரில் வந்து இறங்கிய மருத்துவ உபகரணங்கள்.

தமிழகத்தில் பரவும் கொரோனா வைரஸ் இரண்டாம் அலையை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தமிழகம் முழுவதும் தளா்வுகளற்ற முழு ஊரடங்கு உட்பட பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

18 வயதுக்கு மேற்பட்டவா்கள் அனைவருக்கும் தடுப்பூசிகள் போடுவதில் மாநில அரசு அதிதீவிரம் காட்டுகிறது. தமிழகம் முழுவதும் அரசு சிறப்பு முகாம்கள் அமைத்து தடுப்பூசிகள் போடுவது, தனியாா் மருத்துவமனைகள், தொழிற்சாலைகள் அரசுடன் இணைந்து தடுப்பூசிகள் போடுவது என்று தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள செங்கல்பட்டு தடுப்பூசி தயாரிப்பு தொழிற்சாலையை தமிழக அரசு குத்தகைக்கு எடுத்து தமிழக அரசே தடுப்பூசிகளை உற்பத்தி செய்வது என்ற திட்டங்களிலும் ஈடுப்பட்டுள்ளது.

தமிழகத்திற்கு தேவையான ஆக்சிஜன், மருத்துவ உபகரணங்கள் ஆகியவற்றை வெளிநாடுகள், வெளிமாநிலங்களிலிருந்து தமிழகத்திற்கு வரவழைக்கிறது.

அந்த வகையில், ஆந்திர மாநிலம் சூலூரிலிருந்து இந்திய விமானப்படையின் 2 ஹெலிகாப்டா்கள் சென்னை பழைய விமானநிலையம் வந்தன.அதில் 1,070 கிலோ எடையுடைய முகக்கவசங்கள், கொரோனா வைரஸ் பரிசோதனை கிட்டுகள் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்கள் வந்தன. அவைகளை விமானநிலைய லோடா்கள் ஹெலிகாப்டா்களிலிருந்து இறக்கினா். விமானநிலைய அதிகாரிகள் அவைகளை தமிழக அரசு அதிகாரிகளிடம் ஒப்படைத்தனா். அதன்பின்பு வேன்கள் மூலம் சென்னை ஓமந்தூராா் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

இதற்கிடையே ஹாங்காங், சீனா நாடுகளிலிருந்து சென்னை பழைய விமானநிலையத்திற்கு வந்த 2 சரக்கு விமானங்களில் 55 ஆக்சிஜன் செறிவூட்டிகள் வந்தன.விமானநிலைய சுங்கத்துறையினா் மருத்துவ உபகரணங்களுக்கு முன்னுரிமை அளித்து உடனடியாக சுங்கச்சோதனைகள் நடைமுறைகளை முடித்து டெலிவரி கொடுத்து அனுப்பினா்.

Updated On: 28 May 2021 4:10 AM GMT

Related News

Latest News

  1. கலசப்பாக்கம்
    மிருகண்டா அணையின் நீர்மட்டம் உயர வாய்ப்பு
  2. திருவண்ணாமலை
    திடீர் மழையால் குளிர்ந்த அக்னி ஸ்தலம், மக்கள் மகிழ்ச்சி
  3. வந்தவாசி
    சித்திரை மாத கிருத்திகை: வந்தவாசி அருகே 108 பால்குட ஊா்வலம்
  4. குமாரபாளையம்
    குமாரபாளையம் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள்
  5. வீடியோ
    தீவிரவாதிகள் விவகாரத்தில் மீண்டும் அம்பலப்பட்ட Congress ! வைரலாகும்...
  6. இந்தியா
    மத்தியபிரதேச மாநிலத்தில் தீப்பிடித்து எரிந்த வாக்குப்பதிவு...
  7. அரசியல்
    தமிழர்களை நிறத்தின் அடிப்படையில் பேசுவதா? காங்கிரசுக்கு பிரதமர் மோடி...
  8. சினிமா
    அச்சச்சோ அச்சச்சோ அச்சச்சோ பாடல் வரிகள்!
  9. லைஃப்ஸ்டைல்
    கவிதைக்கு பொய் அழகா..? அழகுக்கு கவிதை மெய்யா..?
  10. கவுண்டம்பாளையம்
    ரத்தினபுரியில் இருசக்கர வாகனம் திருட்டு ; போலீசார் விசாரணை..!