/* */

ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்ட திராவிட விடுதலைக் கழகத்தினர்

நீட் விலக்கு மசோதாவை திருப்பி அனுப்பிய ஆளுநரை திரும்பப் பெற வலியுறுத்தி ஆளுநர் மாளிகை முன்பு திராவிடர் விடுதலைக் கழகம் முற்றுகை போராட்டம்

HIGHLIGHTS

ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்ட திராவிட விடுதலைக் கழகத்தினர்
X

ஆளுநர் மாளிகை முன்பு திராவிடர் விடுதலைக் கழகம் முற்றுகை போராட்டம் 

தமிழக அரசு இயற்றிய நீட் விலக்கு மசோதாவை நிராகரித்து திருப்பி அனுப்பிய ஆளுநரை திரும்பப் பெற வலியுறுத்தி திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் சைதாப்பேட்டையில் ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டம் நடைபெற்றது.

இப்போராட்டத்தில் ஈடுபட்ட 50க்கும் மேற்பட்ட திராவிடர் விடுதலை கழகத்தினர், ஆர்.எஸ்.எஸ் ஆளுநர் தமிழகத்திற்கு வேண்டாம், சமூகநீதி மண்ணில் மனுநீதியை நிலை நாட்டாதே, ஆட்டுக்கு தாடியும் நாட்டுக்கு ஆளுநரும் எதற்கு? நீட் தேர்வை நிரந்தரமாக ரத்து செய் என முழக்கங்களை எழுப்பினர்...

இதன் பின்னர் பேசிய திவிக பொதுச் செயலாளர் விடுதலை ராஜேந்திரன், ஆளுநர் சொன்ன காரணம் இந்த நீட் தேர்வை ரத்து செய்தால் ஏழை எளிய மாணவர்கள் பாதிப்படையலாம். என்று கூறுகிறார் ஏகே ராஜன் தலைமையில் கொடுத்த பரிந்துரை படித்தாரா ஆளுநர் ?

ஆளுநர் செய்ய வேண்டிய கடமை குடியரசு தலைவருக்கு கொடுப்பதே. தமிழ்நாடு சட்டமன்ற அதிகாரத்தை விட ஆளுநர் மாளிகை அதிகாரம் பெரியது என்று காட்டுகிறது.பாஜக தமிழ்நாட்டில் வரமுடியாது என்று கூறிய அடுத்த நாளே இப்படி ஆளுநர் மூலம் திருப்பி அனுப்பப்பட்டுள்ளது என பேசினார்.

இதைத் தொடர்ந்து , போராட்டத்தில் பங்கேற்ற சிலர் ஆளுநரின் புகைப்படத்தை தீயிட்டுக் கொளுத்தினர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது.

Updated On: 5 Feb 2022 3:30 AM GMT

Related News

Latest News

  1. தொழில்நுட்பம்
    மீண்டும் திரும்பும் பூமியில் சூரியப் புயலைத் தூண்டிய மான்ஸ்டர் சன்...
  2. வழிகாட்டி
    காவல் நிலைய வழக்குகளின் அடிப்படை சந்தேகங்கள்..! சட்டம் அறிவோம்...
  3. உலகம்
    இஸ்ரேலிய வான்வழி தாக்குதலில் 37 பாலஸ்தீனியர்கள் உயிரிழப்பு..! சர்வதேச...
  4. உலகம்
    காலநிலை மாற்றத்தால் உலகம் முழுவதும் 26 நாட்கள் அதிகரித்த வெப்பம் :...
  5. உலகம்
    அண்டார்டிகாவில் டெல்லியை விட நான்கு மடங்கு பெரிய பனிப்பாறை உடைந்தது
  6. வானிலை
    வடக்கு, மத்திய இந்தியாவில் வெப்பம் 50 டிகிரியை தாண்டியது
  7. உலகம்
    சொத்தில் பாதிக்கும் மேல் நன்கொடையாக வழங்கும் ஓபன்ஏஐ CEO சாம்
  8. உலகம்
    மோடி தோற்க வேண்டும் : பாக் முன்னாள் அமைச்சர் பேச்சு..!
  9. உலகம்
    பாக் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் அமைதி ஒப்பந்தத்தை மீறியதாக...
  10. வாசுதேவநல்லூர்
    பேருந்து மீது கல்வீசித் தாக்குதல் - நான்கு பேர் கைது