/* */

ராயபுரத்தில் பட்டப்பகலில் இருசக்கர வாகனம் திருட்டு, 3 பேர் கைது

ராயபுரத்தில் பட்டப்பகலில் இருசக்கர வாகனத்தை திருடிச் சென்ற 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

HIGHLIGHTS

ராயபுரத்தில் பட்டப்பகலில் இருசக்கர வாகனம் திருட்டு, 3 பேர் கைது
X

சென்னை ராயபுரத்தில் டூவீலர் திருடர்கள் 3 பேரை போலீஸ்சார் கைது செய்தனர்.

சென்னை ராயபுரத்தில் உள்ள ரங்கப் பிள்ளை தோட்டம் பகுதியை சேர்ந்தவர் சண்முகம். இவருடைய இருசக்கர வாகனத்தை வீட்டு வாசலின் அருகே நிறுத்தியுள்ளார். வீட்டில் உள்ளே சென்று சிறிது நேரம் கழித்து வெளியே வந்து பார்த்த போது இவருடைய இருசக்கர வாகனம் காணவில்லை.

இந்த சம்பவம் தொடர்பாக ராயபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். வழக்கை பதிவு செய்த ராயபுரம் காவல்துறையினர் அங்கு உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர்.

அப்போது இருசக்கர வாகனத்தை திருடிச் சென்ற 3 பேரை காவல்துறையினர் அடையாளம் கண்டு கைது செய்தனர். திருடிச் சென்ற இருசக்கர வாகனத்தை சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் நிறுத்தி வைத்திருந்துள்ளனர்.

இதைத்தொடர்ந்து, அங்கிருந்து வாகனத்தை பறிமுதல் செய்த உரிமையாளரிடம் காவல்துறையினர் ஒப்படைத்தனர். மேலும் கைது செய்யப்பட்ட கார்த்திகேயன் கிஷோர் மற்றும் ஐயப்பன் இவர்கள் மீது வேறு ஏதேனும் குற்ற சம்பவங்கள் உள்ளதா என்பது குறித்தும் காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Updated On: 7 July 2021 3:57 AM GMT

Related News

Latest News

  1. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. நீலகிரி
    கோடை சீசன் துவக்கம். நீலகிரியில் போக்குவரத்து மாற்றம்!
  3. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  4. மாதவரம்
    கார் ஓட்டுநரிடம் கத்தியைக் காட்டி பணம் பறித்த மூவர் கைது
  5. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  6. ஆரணி
    திருவண்ணாமலை மாவட்டத்தில் மே தின கொண்டாட்டங்கள்
  7. ஈரோடு
    கோடை வெயில்: ஈரோட்டில் ஒரு எலுமிச்சை பழம் ரூ.25-க்கு விற்பனை
  8. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்டத்தில் தொமுச சார்பில் மாபெரும் மே தின ஊர்வலம்
  9. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 46 கன அடியாக சரிவு
  10. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 27 கன அடியாக சரிவு